எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவை இரண்டும் பதினென் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
எட்டுத்தொகை நூல்களை “எண் பெருந்தொகை” என்றும் கூறுவர்.
தொகை நூல் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
இந்நூலுக்கு இலக்கணம் கூறும் நூல் - பன்னிரு பாட்டியல்.
எட்டுத்தொகையில் அகம்பற்றிய நூல்கள் : 5
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
இந்நூலில் புறம் பற்றிய நூல்கள் -2
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
இந்நூலில் அகமும், புறமும் கலந்த நூல்:1
- பரிபாடல்
இந்நூலில் நானூறு பாடல்களின் எண்ணிக்கை கொண்ட நூல்கள் நான்கு.
கலித்தொகை, பரிபாடல் தவிர மற்ற நூல்கள் ஆசிரியப்பாவால் ஆனது.
கலிப்பா வகை - கலித்தொகை
பரிபாட்டு வகை பரிபாடல்
இந்நூலில் காலத்தால் முந்தியது - புறநானூறு
இந்நூலில் காலத்தால் பிந்தியது - பரிபாடல், கலித்தொகை.
இந்நூலில் முதன்முதலாக தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.