இந்நூலை தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
இந்நூலை முதலில் புதிப்பித்தவர் உ.வே. சாமிநாதர்
முதலில் உரை எழுதியவர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
அகத்திணை, ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது
இந்நூல் 3 முதல் 6 அடிகளைக் கொண்டது.
500 பாடல்கள், 5 புலவர்கள் பாடியுள்ளனர்.
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார்".
குறிப்பிடும் கடவுள் - சிவபெருமான்
ஐங்குறு நூற்றில் ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் என பத்து பிரிவுகளாக உள்ளது.
மருதத்திணை பாடல்கள் (100) -ஓரம்போகி
நெய்தல் திணை பாடல்கள் (100) - அம்மூவன்
குறிஞ்சித்திணை பாடல்கள் (100) - கபிலர்
பாலை திணை பாடல்கள் (100) -ஓதலாந்தை
முல்லைத்திணை பாடல்கள் (100) -பேயனார்
இந்நூலில் ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டும் தொலைந்து போனது.
498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
தொகை நூல்களில் மருதத்திணையை முதலாவதாகக் கொண்ட நூல்.
தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வளப்பு இதில் விரவி வந்துள்ளது.
சங்க இலக்கியத்தில் உள்ளுறையும், இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் இதுவே.