இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
இந்நூல் 4 முதல் 40 அடிகள் கொண்டது.
400 பாடல்கள், 157 புலவர்களால் பாடப்பட்டது. இதில் 15 பெண் புலவர்கள்.
புறத்திணை ஆசிரியப்பாவை சார்ந்த நூல்.
புறம் + நான்கு = புறநானூறு.
நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணையைக் காட்டுகிறது.
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், கடவுள் சிவவெருமான்.
முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
267 - 400 பாடல்களுக்கு உரை எழுதி முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
புறநானூறின் வேறு பெயர்கள்
- புறம்
- புறப்பாட்டு
- புறம்பு நானூறு
- தமிழ்க்கருவூலம்
- திருக்குறளின் முன்னோடி
- தமிழர் களஞ்சியம்
- தமிழர் வரலாற்று பெட்டகம்.
புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
புறநானூற்றில் கூறப்படாத திணை உழிஞைத்திணை.
ஆசிரியப்பாவால் அமைந்திருந்தாலும் வஞ்சி அடிகளும் உள்ளது.
15 பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள், 18 வேளிர்களைப் பற்றி புறநானூறு கூறுகிறது.
ஜி.யு. போப் அவர்களை புறநானூறு கவர்ந்தது.
இந்நூலின் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
புறநானூற்றில் சில பாடல்களுக்கு திணைப்பெயர் தெரியவில்லை. அவை 244, 282, 289,323,355, 361.
பெண்களின் வீரத்தைக் கூறும் மூதின்முல்லை.
ஔவையார் இந்நூலில் அதிகம் பாடலைப் பாடியுள்ளார்.