இந்தநூலை இயற்றியவர் நக்கீரர்.
பாட்டுடைத் தலைவன் முருகப்பெருமான்.
இந்தூல் 317 அடிகள், புறத்திணை, ஆசிரியப்பா வகை, ஆற்றுப்படை பொருளைக் கொண்டது.
நச்சினார்க்கினியர், பரிமேலழகர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதல் பாடவாக அமைந்துள்ளது, இந்தாலுக்கு முருகு, புலவராற்றுப்படை என்று வேறு பெயர்களும் உண்டு.
பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை இரு நூல்களையும் நக்கீரர் பாடியுள்ளார்.
முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்களார்.
முதல் பகுதி - திருப்பரங்குன்றம். இயற்கை வளம், முருகளின் திருக்கோலம், சூரனுடன் முருகன் போர் செய்தல் ஆகியவற்றை முதல் பகுதி குறிப்பிடுகிறது.
இரண்டாம் பகுதி - திருச்சீர் அலைவாய் (திருச்செந்தூர்), முருகனுடைய ஆறுமுகங்கள், பள்ளிரு தோள்களின் செயல்களைக் குறிப்பிடுகிறது.
மூன்றாம் பகுதி - திருஆவின்குடி (பழனிமலை). வழிபடும் மகளிரின் சிறப்புகள், முருகளை வழிபடும் முனிவரின் பெருமைகளைக் குறிப்பிடுகிறது.
நான்காம் பகுதி - திருவேரகம் (திருப்பதிர் என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஒதுவார் செயல்களைக் குறிப்பிடுகிறது.
ஐந்தாம்பகுதி- மலைப்பகுதி மகளிர் குரக்குரவை, முருகனின் அணி ஆசை, அழகு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
ஆறாம் பகுதி - பழமுதிச்சோலை (அழகர் மலை). முருகன் இருக்கும் நீர்த்துறை. பழமுதிர்ச்சோலையின் அருவி, முருகன் அருளும் முறையைக் குறிப்பிடுகிறது.