இந்நூலை தொகுத்தவர், உப்பூரி குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார்.
இந்நூலை தொகுப்பித்தவர், பாண்டியன் உக்கிர பெருவழுதி
கடவுள் வாழ்த்து பாடியவர், பாரதம் பாடிய பெருந்தேவனார்.
குறிப்பிடும் கடவுள் சிவபெருமான்.
இந்நூலுக்கு முதலில் உரை எழுதியவர், நா.மு. வேங்கடசாமி நாட்டார்.
முதலில் பதிப்பித்தவர், வே. இராசகோபால் ஐயர்.
இந்நூல் 13 முதல் 31 அடிகள் வரை கொண்டது. அகத்திணை, ஆசிரியப்பா வகை கொண்ட பாடல்கள்.
400 பாடல்களை, 145 புலவர்கள் பாடியுள்ளனர்.
அகம் + நான்கு + நூறு = அகநானூறு.
அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
அகநானூரின் வேறு பெயர்கள்
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
- பெருந்தொகை நானூறு
- நெடுந்தொகை நானூறு
- நெடும்பாட்டு
1-120 களிற்றியானை நிரை = 120
121-300 மணிமிடைப்பவளம் 180
301-400 நித்திலக் கோவை = 100
பாலைத்திணை (200 பாடல்கள்) 1, 3, 5, 7, 9, 11 என வருவன.
குறிஞ்சித்திணை (80 பாடல்கள்) 2, 8, 12, 18, 22, 28 என வருவன.
முல்லைத்திணை (40 பாடல்கள்) 4, 14, 24, 34 என வருவன.
மருதத்திணை (40 பாடல்கள்) 6, 16, 26, 36 என வருவன.
நெய்தல் திணை (40 பாடல்கள்) 10, 20, 30, 40 என வருவன.
அகநானூறு சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாகக் கூறுகிறது.
பண்டைய தமிழ் மக்களின் திருமண விழா நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையைப் பற்றி கூறுகிறது.