இந்நூலை இயற்றியவர் முடத்தாமக்கண்ணியார்.
பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.
இந்நூல் 248 அடிகளைக் கொண்டது. ஆற்றுப்படை நூல்களுள் சிறியது.
இந்நூல் புறத்திணை, ஆற்றுப்படை பொருள், வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
நச்சினார்க்கினியர், மகாதேவ முதலியார் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.
ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பெருநர் என்பர்.
பொருநாற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரைக் கூறுகிறது.
கரிகாலனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.
கரிகாலனின் வலிமையை "வெண்ணித்தாங்கிய ஒருவரு நோன்றாள்" எனச் சிறப்பிக்கப்படுகிறது.
கரிகாற் சோழன் பொருநரை அனுப்பும் போது ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.