Tnpsc General Tamil Online Notes - 001

TNPSC General Tamil Online Notes - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 001

Tnpsc General Tamil Online Notes - 001

TNPSC General Tamil Online Notes - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • உரிச்சொல்
  • இடைச்சொல்
Ans:- D
2.

‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்

  • வினையெச்சம்
  • தெரிநிலை வினையெச்சம்
  • குறிப்பு வினையெச்சம்
  • முற்றெச்சம்
Ans:- C
3.

‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

  • திருவாசகம்
  • தேவாரம்
  • திருக்குறள்
  • பட்டினப்பாலை
Ans:- B
4.

4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

  • ரு
Ans:- B
5.

மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா

  • அறி வினா
  • ஐய வினா
  • கொடை வினா
  • ஏவல் வினா
Ans:- C
6.

பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.

  • குயில் கூவும்
  • மயில் அகவும்
  • கோழி கூவும்
  • கிளி பேசும்
Ans:- C
7.

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

  • மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
  • மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
  • மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
  • மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
Ans:- B
8.

தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

  • பிள்ளையார்ப்பட்டி
  • பெருமாள் பட்டி
  • சுங்குவார்ப்பட்டி
  • செல்லப்பிராட்டி
Ans:- A
9.

ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்

  • உ.வே.சாமிநாதன்
  • ம.பொ.சிவஞானம்
  • திரு.வி.கல்யாண சுந்தரனார்
  • தாரா.பாரதி
Ans:- A
10.

நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

  • ஆஸ்பிரின்
  • கோப்ராக்சின்
  • குளொராபார்ம்
  • தைராக்சின்
Ans:- B
11.

“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்

  • வங்கிய சேகர பாண்டியன்
  • கூன் பாண்டியன்
  • சூடாமணி பாண்டியன்
  • பொற்கை பாண்டியன்
Ans:- C
12.

மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்

  • உயிர்
  • கழுத்து
  • வாய்
  • மார்பு
Ans:- D
13.

தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது

  • பெயர்ச்சொல்
  • ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • வினைச்சொல்
  • உரிச்சொல்
Ans:- C
14.

தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்

  • பாரதிதாசன்
  • கம்பதாசன்
  • பூங்குன்றனார்
  • வாணிதாசன்
Ans:- D
15.

அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக

  • மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
  • மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
  • மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
  • முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
Ans:- B
16.

‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?

  • இன்னிசை அளபெடை
  • செய்யுளிசை அளபெடை
  • சொல்லிசை அளபெடை
  • ஒற்றளபெடை
Ans:- C
17.

கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை

  • இரண்டாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
  • நான்காம் வேற்றுமை
  • ஆறாம் வேற்றுமை
Ans:- B
18.

திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
குறிஞ்சி 1. பாடி, சேரி
முல்லை 2. பேரூர் மூதூர்
மருதம் 3. பட்டினம், பாக்கம்
நெய்தல் 4. சி றுகுடி

  • 4 1 2 3
  • 2 1 4 3
  • 2 4 3 1
  • 3 1 4 2
Ans:- A
19.

பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
கூழை 1. 1,3,4 சீர்களில் வரும்
மேற்கதுவாய் 2. 1,2,3,4 சீர்களில் வரும்
கீழ்க்கதுவாய் 3. 1,2,3 சீர்களில் வரும்
முற்று 4. 1,2,4 சீர்களில் வரும்

  • 3 1 4 2
  • 1 2 3 4
  • 1 3 4 2
  • 3 2 4 1
Ans:- A
20.

DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?

  • படப்பிடிப்பு, இயக்குநர்
  • நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
  • ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
  • படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
Ans:- C
21.

ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

  • வளையல்
  • ஐந்து
  • திண்ணை
  • ஏதுமில்லை
Ans:- C
22.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?

  • அகவலோசை
  • தூங்கலோசை
  • செப்பலோசை
  • துள்ளலோசை
Ans:- C
23.

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?

  • முதுமொழிக் காஞ்சி
  • ஏலாதி
  • இனியவை நாற்பது
  • இன்னா நாற்பது
Ans:- A
24.

‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

  • அன்புடையோர்
  • அறிவு முதிர்ச்சியுடையோர்
  • ஆர்வமிகு நண்பர்கள்
  • உற்றார்
Ans:- B
25.

“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க

  • அன்பு இலவர்க்கு
  • மரம்தளிர்த் தற்று
  • அஃதே துணை
  • இயைந்த தொடர்பு
Ans:- A
26.

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

  • சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
  • சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
Ans:- B
27.

‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்

  • நற்றிணை
  • பரிபாடல்
  • குறுந்தொகை
  • பதிற்றுப்பத்து
Ans:- C
28.

சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்

  • கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
  • முனுசாமி, மங்களம்
  • வெங்கட்ராமன், அம்மணி
  • நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
Ans:- B
29.

‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்

  • எதிர்மறைத் தொடர்
  • பிறவினைத் தொடர்
  • செய்வினைத் தொடர்
  • தன்வினைத் தொடர்
Ans:- C
30.

‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?

  • குறிஞ்சி
  • மருதம்
  • நெய்தல்
  • முல்லை
Ans:- A
31.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?

  • இல்பொருள் உவமை அணி
  • உருவக அணி
  • வேற்றுமை அணி
  • பிறிது மொழிதல் அணி
Ans:- A
32.

கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

  • பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
  • ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
  • மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
  • திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
Ans:- C
33.

கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை

  • வெண்தயிர்
  • சேவடி
  • செந்நெல்
  • சுடரொளி
Ans:- D
34.

‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி

  • இனிய சொல்
  • இனிமையற்ற சொல்
  • இழிவான சொல்
  • விரிவான சொல்
Ans:- A
35.

வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

  • கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
Ans:- C
36.

கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்

  • கரிசாலை
  • கையாந்தகரை
  • சிங்கவல்லி
  • தேகராசம்
Ans:- C
37.

அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?

  • நிரல்நிறைப் பொருள்கோள்
  • ஆற்றுநீர் பொருள்கோள்
  • மொழிமாற்றுப் பொருள்கோள்
  • விற்பூட்டுப் பொருள்கோள்
Ans:- A
38.

'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்

  • துன்பம்
  • பகை
  • நட்பு
  • வலிமை
Ans:- B
39.

'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?

  • கிளி, மயில்
  • நாரை, அன்னம்
  • புறா, பருந்து
  • கடற்காகம்
Ans:- C
40.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.

  • இணை மோனை
  • பொழிப்பு மோனை
  • ஒரூஉ மோனை
  • கூழை மோனை
Ans:- B
41.

திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

  • அறநூற்று ஐம்பத்தெட்டு
  • அறநூற்று எண்பத்தைந்து
  • நானூற்று ஐம்பத்தெட்டு
  • அறுநூற்றுப் பத்து
Ans:- A
42.

சொல்லிசை அளபெடை தேர்க

  • உண்பதூஉம்
  • பெறாஅவிடின்
  • தழீஇ
  • அண்ணன்
Ans:- C
43.

பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி

  • வெம் + இரும்பு + ஆணி
  • வெம் + இருப்பு + ஆணி
  • வெம்மை + இரும்பு + ஆணி
  • வெம்மை + இருப்பு + ஆணி
Ans:- C
44.

பொருந்தா இணையைக் கண்டறிக

  • பையுள் - இன்பம்
  • பனவன் - அந்தணன்
  • விபுதர் - புலவர்
  • அல்கு - இரவு
Ans:- A
45.

சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது

  • மாம்பழம்
  • நாவல் பழம்
  • கொய்யாப்பழம்
  • பலாப்பழம்
Ans:- B
46.

“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

  • புகழேந்திப் புலவர்
  • உமறுப் புலவர்
  • காளமேகப் புலவர்
  • அழகிய சொக்கநாதப் புலவர்
Ans:- A
47.

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

  • உ.வே.சா
  • பாவாணர்
  • ஞானப்பிரகாசன்
  • ஞானக் கூத்தன்
Ans:- C
48.

கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.

  • கூவும்
  • கத்தும்
  • குழறும்
  • அகவும்
Ans:- C
49.

Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க

  • சிற்றுண்டி
  • சிற்றுணா
  • சிற்றுணவு
  • சீரான உணவு
Ans:- B
50.

மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
Ans:- B
51.

“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?

  • பாரதியார்
  • சுந்தரம் பிள்ளை
  • கவிமணி
  • பாரதிதாசன்
Ans:- B
52.

கோடிட்ட இடங்களை நிரப்புக. சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------

  • துளசி
  • தூதுவளை
  • அகத்திக்கீரை
  • கீழாநெல்லி
Ans:- B
53.

‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்

  • பாரதியார்
  • அதிவீரராம பாண்டியர்
  • பாரதிதாசன்
  • ஒளவையார்
Ans:- D
54.

பொருத்துக.
WRIT 1. மணிக்கட்டு
WRIST 2. எழுது
WRITE 3. உரிமை
RIGHT 4. சட்ட ஆவணம்

  • 4 1 2 3
  • 4 2 1 3
  • 2 1 3 4
  • 2 3 4 1
Ans:- A
55.

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?

  • பம்மல் சம்பந்தனார்
  • சங்கரதாசு சுவாமிகள்
  • பரிதிமாற் கலைஞர்
  • தி.க.சண்முகனார்
Ans:- A
56.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
வினைத்தொகை 1. நாலிரண்டு
உவமைத்தொகை 2. செய்தொழில்
உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
அன்மொழித்தொகை 4. மதிமுகம்

  • 2 4 1 3
  • 2 3 1 4
  • 4 2 3 1
  • 4 3 1 2
Ans:- A
57.

கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.

  • கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  • உழாஅர் உழவர்
  • படாஅ தவர்
  • தூஉ மழை
Ans:- A
58.

கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்

  • திருவள்ளுவரைப் படித்துப் பார்
  • கம்பனைப் புரட்டிப்பார்
  • தொல்காப்பியனை தொட்டு உணர்
  • நான் சமையல் கற்றேன்
Ans:- D
59.

மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

  • ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
  • ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
  • ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
  • ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது.
Ans:- B
60.

பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க

  • கொலைப்புலி
  • பொங்கு கடல்
  • பொழிதருமணி
  • செய்கொல்லன்
Ans:- A
61.

செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

  • கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  • அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  • அளைமறி பாப்புப் பொருள்கோள்
  • மொழி மாற்றுப் பொருள்கோள்
Ans:- B
62.

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

  • கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
  • நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
  • கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
  • மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.
Ans:- C
63.

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது

  • உள்ளுறை
  • உருவகம்
  • உவமை
  • வெளிப்படை
Ans:- A
64.

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.

  • தமிழர்கள் அரபு நாட்டுடனும்இ யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
  • சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
  • தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
  • இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
Ans:- A
65.

“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்

  • குமரகுருபரர்
  • சீத்தலைச் சாத்தனார்
  • சேக்கிழார்
  • பாரதிதாசன்
Ans:- B
66.

சேக்கிழாரின் இயற்பெயர்

  • மீனாட்சி சுந்தரனார்
  • ஆனந்தரங்கம் பிள்ளை
  • அருண் மொழித்தேவர்
  • வாகீசர்
Ans:- C
67.

குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை

  • மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
  • ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
  • நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
  • இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
Ans:- C
68.

“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது : சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்

  • மு.மேத்தா
  • சாலை.இளந்திரையன்
  • அப்துல் ரகுமான்
  • ந.பிச்சமூர்த்தி
Ans:- B
69.

கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.

  • ஞாயிறு
  • பகலவன்
  • பிரமன்
  • ஆதவன்
Ans:- C
70.

பிரித்தெழுதுக நன்கணியர்

  • நன்கு +அணியர்
  • நன் +அணியர்
  • நான்கு + அணியர்
  • நன்கு +கணியர்
Ans:- A
71.

பொருத்துக :
வைதருப்பம் 1. மதுரகவி
கௌடம் 2. ஆசுகவி
பாஞ்சாலம் 3. வித்தாரகவி
மாகதம் 4. சித்திரகவி

  • 2 3 1 4
  • 4 3 1 2
  • 2 1 4 3
  • 3 4 2 1
Ans:- C
72.

‘விளம்பி’ என்பது -------------- பெயர்

  • இயற்பெயர்
  • புனைபெயர்
  • ஊர்ப்பெயர்
  • இறைவனின் பெயர்
Ans:- C
73.

‘அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ - பாடியவர் யார்?

  • அப்பர்
  • சம்பந்தர்
  • சுந்தரர்
  • திருமூலர்
Ans:- C
74.

சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------

  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • பதினெண் கீழ்க்கணக்கு
  • பதினெண் மேல்கணக்கு
Ans:- C
75.

பொருந்தாத இணையைக் கண்டறிக

  • சிறுபஞ்சமூலம் - காரியாசான்
  • ஞானரதம் - பாரதியார்
  • எழுத்து – சி.சு.செல்லப்பா
  • குயில்பாட்டு – கண்ணதாசன்
Ans:- D
76.

“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

  • திருவாசகம்
  • திருக்குறள்
  • தேவாரம்
  • திருத்தொண்டர் புராணம்
Ans:- C
77.

“கடம்” என்ற சொல்லின் பொருள்

  • முகம்
  • கைகள்
  • உடம்பு
  • இடுப்பு
Ans:- C
78.

அகத்துறுப்பு என்பது

  • பல்
  • மனத்தின் உறுப்பு அன்பு
  • இதயம்
  • வயிறு
Ans:- B
79.

“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” – என்று கூறிய அறிஞர்

  • தேவநேயப் பாவாணர்
  • பாரதிதாசன்
  • கால்டுவெல்
  • ஜி.யு.போப்
Ans:- C
80.

தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

  • சுகலகலா வல்லி மாலை
  • பூங்கொடி
  • மணிக்கொடி
  • உரிமை வேட்கை
Ans:- B
81.

“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

  • கட்டடக் கலை
  • சிற்பக் கலை
  • ஓவியக் கலை
  • அழகுக் கலை
Ans:- D
82.

“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

  • புளியங்குடி
  • சிறுகூடல் பட்டி
  • மாங்குளம்
  • இடையன்குடி
Ans:- D
83.

பொருத்துக :
திணை பொழுது
குறிஞ்சி 1. எற்பாடு
முல்லை 2. நண்பகல்
மருதம் 3. மாலை
நெய்தல் 4. யாமம்
பாலை 5. வைகறை

  • 4 3 5 1 2
  • 2 1 4 5 3
  • 5 4 1 2 3
  • 3 1 2 4 5
Ans:- A
84.

‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்

  • தயார் செய்தல்
  • பாட்டுப்பாடுதல்
  • மறையும் நேரம்
  • துன்பப்படுதல்
Ans:- C
85.

“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்

  • பாரதிதாசன்
  • கவிமணி
  • பாரதியார்
  • அழ.வள்ளியப்பா
Ans:- C
86.

“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்

  • மாறனலங்காரம்
  • காரிகை
  • தண்டியலங்காரம்
  • நன்னூல்
Ans:- C
87.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்

  • பாரதியார்
  • திருவள்ளுவர்
  • ஒளவையார்
  • திருமூலர்
Ans:- B
88.

தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்

  • கண்ணதாசன்
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
  • பாரதியார்
Ans:- B
89.

கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
I. சிங்கம் முழங்கும்
II.பூனை கீச்சிடும்
III.புறா குனுரும்
IV.வண்டு முரலும்

  • I மற்றும் II சரி
  • III மற்றும் IV சரி
  • I, III மற்றும் IV சரி
  • II, III மற்றும் IV சரி
Ans:- C
90.

கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

  • சிந்துவிருத்தம்
  • கட்டளை கலித்துறை
  • ஆசிரியவிருத்தம்
  • கலித்தாழிசை
Ans:- D
91.

கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்

  • காக்கைப்பாடினியார்
  • காரைக்காலம்மையார்
  • வெள்ளி வீதியார்
  • நப்பசலையார்
Ans:- C
92.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே -இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
  • பரிபாடல்
Ans:- A
93.

“…. சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்

  • கபிலர்
  • கம்பர்
  • ஒளவையார்
  • பரணர்
Ans:- A
94.

“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் ‘பா’ – எது?

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
Ans:- B
95.

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக. பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்

  • பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
  • பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
  • பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
  • பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
Ans:- D
96.

நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?

  • கூத்துக்கலை
  • நாட்டியக்கலை
  • பரதக் கலை
  • சிற்பக் கலை
Ans:- A
97.

‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?

  • வண்ணதாசன்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • வாணிதாசன்
Ans:- C
98.

‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :

  • ஆண்டுக் குறிப்பு
  • மாதக்குறிப்பு
  • நாட் குறிப்பு
  • வாரக்குறிப்பு
Ans:- C
99.

வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல் கொடு :

  • கொடுத்தல்
  • கொடுத்த
  • கொடுத்து
  • கொடுத்தவன்
Ans:- D
100.

குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?

  • ஓன்று
  • இரண்டு
  • ஒன்றரை
  • அரை
Ans:- D

إرسال تعليق

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!