17

Tnpsc General Tamil Online Notes - 018

"TNPSC General Tamil Online Notes - 18 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 20 min read
Tnpsc General Tamil Online Notes - 018

Tnpsc General Tamil Online Notes - 018

TNPSC General Tamil Online Notes - 18 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

"காலையில் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
இன்று இரா முடிக்கினும் முடியும்; “
இது யாருடைய கூற்று?

  • சுந்தர முனிவர்
  • நடராஜன்
  • சுந்தரனார்
  • சலீம் அகமது
Ans:- B
2.

இலக்கணக் குறிப்புத் தருக.
கடிநகர், சாலத் தகும்

  • வினைச்சொற்றொடர்கள்
  • உரிச்சொற்றொடர்கள்
  • வினைத் தொகைகள்
  • பண்புத்தொகைகள்
Ans:- B
3.

சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?

  • நர்த்தகி நடராஜ்
  • சுந்தரனார்
  • ஜீவா
  • செல்வி
Ans:- A
4.

"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது

  • அகத்திய ஞானம்
  • தொல்காப்பிய ஞானம்
  • திருக்குறள்
  • திருமந்திரம்
Ans:- D
5.

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?

  • தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு.
  • தன்னை அறிவதற்கு ‘நான்' என்னும் அகங்காரம் அழிய வேண்டும்.
  • அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி
  • நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர்.
Ans:- A
6.

கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?

  • வசித்துவம்
  • காமாவசாயித்வம்
  • மகிமாவசித்வம்
  • ஈசத்துவம்
Ans:- C
7.

"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?”
இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம்
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Ans:- D
8.

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
ஒதுக, முழக்கம்

  • கேட்டல், சத்தம்
  • சொல்க, ஓங்கி உரைத்தல்
  • கேட்டல், ஒலி
  • ஒலி, ஒளி
Ans:- B
9.

"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?

  • ம.லெ.தங்கப்பா
  • ஏ.கே.ராமானுஜம்
  • ஆல்பர்காம்யு
  • பிரம்மராஜன்
Ans:- A
10.

நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?

  • மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
  • பனைமலைக் கோயில்
  • தஞ்சைப் பெரியக் கோயில்
  • காஞ்சி கைலாசநாதர் கோயில்
Ans:- C
11.

இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?

  • மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
  • பனைமலைக் கோயில்
  • தஞ்சைப் பெரியக் கோயில்
  • காஞ்சி கைலாசநாதர் கோயில்
Ans:- D
12.

இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.

  • தஞ்சாவூர்
  • சிதம்பரம்
  • கும்பகோணம்
  • திருவையாறு
Ans:- D
13.

முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது

  • அக்பர்
  • பாபர்
  • ஷாஜகான்
  • ஒளரங்கசீப்
Ans:- D
14.

ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்

  • 11.01.1671
  • 11.01.1761
  • 01.11.1671
  • 01.11.1761
Ans:- B
15.

"சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீறாப்புராணம்
  • முதுமொழிமாலை
Ans:- C
16.

"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்

  • திரு.வி.க
  • அண்ணா
  • ராஜாஜி
  • மா.இராசமாணிக்கனார்
Ans:- D
17.

ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்

  • ஆசிரியர்
  • கணக்காயர்
  • குரவர்
  • சான்றோர்
Ans:- C
18.

தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன

  • 12,894
  • 14,298
  • 14,892
  • 12, 498
Ans:- D
19.

எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .

  • இரும்பு சில்லுகள்
  • சில்வர் சில்லுகள்
  • சிலிக்கன் சில்லுகள்
  • சிலிக்கன் அட்டைகள்
Ans:- C
20.

ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு

  • 80 மில்லி
  • 8000 மில்லி
  • 8 மில்லி
  • 800 மில்லி
Ans:- D
21.

கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது

  • நியுரானில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
  • நியுரோ டிரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவு அதிகமாகிறது.
  • பெப்டைட் என்னும் சங்கதி குறைகிறது
  • கற்க கற்க மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது.
Ans:- C
22.

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
மலா - வல்ஸட் (குஜராத்)

  • அனைத்தும் சரி
  • 1, 3 சரி
  • 1 , 2 சரி
  • 1, 2 தவறு
Ans:- C
23.

_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • கர்நாடகா
Ans:- A
24.

கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.

  • 17
  • 48
  • 51
  • 15
Ans:- D
25.

ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.

  • கால் விரல்கள், கை விரல்கள், தலை
  • கை விரல்கள், கால் விரல்கள், தலை
  • வாய், மூக்கு, கண்
  • மூக்கு, வாய், கண்
Ans:- C
26.

" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?

  • தோடா
  • குருக்
  • பர்ஜி
  • குடகு
Ans:- C
27.

மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.

  • கண்மாய்
  • உறைக்கிணறு
  • ஊருணி
  • குளம்
Ans:- B
28.

கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?

  • அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது
  • ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
  • குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
  • ஆறு -பெருகி ஓடும் நதி
Ans:- C
29.

பொருத்துக
Payment terminal i) கட்டணம் செலுத்தும் கருவி
Point of Sale terminal ii) விற்பனைக்கருவி
Smart card iii) ஆளறி சோதனைக் கருவி
Biometric device iv) திறன் அட்டை

  • i ii iv iii
  • ii iii i iv
  • ii i iv iii
  • iv iii ii i
Ans:- A
30.

“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?

  • கண்ணதாசன்
  • வைரமுத்து
  • வாலி
  • தமிழ்ஒளி
Ans:- B
31.
Tnpsc General Tamil Online Notes - 018-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்

  • 1903 – 1943
  • 1913 – 1933
  • 1903 - 1953
  • 1913 – 1953
Ans:- A
32.

குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

  • 2
  • 3
  • 4
  • 5
Ans:- D
33.

கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • சிலப்பதிகாரம்
  • பட்டினப்பாலை
Ans:- B
34.

சரியான பொருளை தேர்ந்தெடு
புரிசை, பணை

  • மதில், பனைமரம்
  • சாளரம், பனைமரம்
  • நீர்நிலை, சாளரம்
  • மதில், முரசு
Ans:- D
35.

2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்

  • நார்த்தாமலை – புதுக்கோட்டை
  • சீனிவாசநல்லூர் – திருச்சி
  • கொடும்பாளூர் – புதுக்கோட்டை
  • திருவரங்கம் – திருச்சி
Ans:- C
36.

திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?

  • 2ம் குலோத்துங்கன்
  • முதலாம் குலோத்துங்கன்
  • 2ம் இராசராசன்
  • 2ம் பராந்தகன்
Ans:- A
37.

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74 , அடி 6
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55 , அடி 4

  • 3 மட்டும் சரி
  • 3 மட்டும் தவறு
  • அனைத்தும் சரி
  • அனைத்தும் தவறு
Ans:- C
38.

பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?

  • அதிவீரராம பாண்டியன்
  • சடையவர்மன் வீரபாண்டியன்
  • வீரகேசரி
  • வெற்றிவேற்செழியன்
Ans:- D
39.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி

  • வேண்+டி
  • வேண்டு+ட்+இ
  • வேண்டு+இ
  • வேண்+டு+இ
Ans:- C
40.

‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?

  • ஜென்
  • லாவோட்சு
  • தாவோ
  • லாமார்க்
Ans:- B
41.

பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.

  • பஃருளி மலை
  • விந்திய, சாத்பூரா
  • சாத்பூரா, இமயமலை
  • விந்தியமலை, இமயமலை
Ans:- D
42.

மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
Ans:- D
43.

கோவலன் ,கண்ணகி , மாதவி , மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்

  • நலங்கிள்ளி
  • நெடுங்கிள்ளி
  • கிள்ளிவளவன்
  • நெடுஞ்செழியன்
Ans:- B
44.

சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?

  • சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம்
  • எகிப்து , காழகம், கங்கை துறைமுகம்
  • சீனா , காழகம், எகிப்து
  • சீனா , காழகம் , கங்கை துறைமுகம்
Ans:- A
45.

கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள் , கோவிலின் தரைப்பகுதி , சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .

  • புடைப்புச் சிற்பங்கள்
  • முழு உருவச் சிற்பங்கள்.
  • பிரதிமை
  • தெய்வசிற்பங்கள்
Ans:- A
46.

உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?

  • சுவாமிமலை
  • மாமல்லபுரம்
  • மதுரை
  • கும்பகோணம்
Ans:- B
47.

கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன .
விருந்தோம்பல் சுற்றம் தழுவல்
வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்

  • அனைத்தும் சரி
  • 1, 2 ,4 சரி
  • 1 , 3, 4 சரி
  • 1, 2, 3 சரி
Ans:- D
48.

“ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
Ans:- C
49.

"இயற்கைஅனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்

  • மசானபு ஃபுகோகா
  • நம்மாழ்வார்
  • கம்பர்
  • திருவள்ளுவர்
Ans:- A
50.

இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.

  • கூட்டுறவு வங்கி
  • பேரூராட்சி அலுவலகம்
  • கிராம அலுவலர்
  • வேளாண்மை அலுவலகம்
Ans:- D
51.

குறுகினன்- சரியாக பிரித்தெழுதுக

  • குறு + இன் + அன்
  • குறுகி + இன் + அன்
  • குறுகு + இன் + அன்
  • குறுக்கி + இன் + அன்
Ans:- C
52.

உவமஉருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க

  • முழவு உறழ் தடக்கை
  • தாய் போல் பேசும் மக்கள்
  • மான் மருளும்
  • வேய்புரை தோள்
Ans:- C
53.

அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

  • சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
  • செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
  • சிறுகதை, சூடாமணி, சிறுகதை, சோளம், சார்பு
  • சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமணி
Ans:- A
54.

கோடிட்டஎழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்

  • எதுகை தொடை
  • இயைபு தொடை
  • முரண் தொடை
  • மோனை தொடை
Ans:- A
55.

நாறுவஎன்னும் சொல் தரும் பொருள்

  • மூத்த
  • முளைப்ப
  • நறுமணம்
  • கெடாமல்
Ans:- B
56.

"நல்லிகைக்கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • மலைபடுகடாம்
  • மதுரைக் காஞ்சி
  • முல்லைப்பாட்டு
  • பட்டினப்பாலை
Ans:- A
57.

சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது

  • நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
  • ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள்
  • முதல் ஆறு திருமுறைகள்
  • ஒன்று, இரண்டு, மூன்று திருமுறைகள்
Ans:- A
58.

கீழ்க்கண்டவற்றுள்சரியானதை தேர்ந்தெடு

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி.இராசகோபாலன்
இவர்பழையனூரில் பிறந்தார்
துறைமுகம்,சுவரும்சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்.
தேன்மழைஎன்னும்கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

  • 1, 4 சரி
  • 1 , 3, 4 சரி
  • 1, 2, 4 சரி
  • அனைத்தும் சரி
Ans:- C
59.

பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்

  • குதிரை
  • யானை
  • கடவுள்
  • மனிதன்
Ans:- B
60.

ஜி.யு.போப்கி.பி. 1820 ஆம் ஆண்டு ____ஆம் நாள் பிறந்தார்

  • ஏப்ரல் 24
  • நவம்பர் 17
  • பிப்ரவரி 18
  • ஆகஸ்ட் 23
Ans:- A
61.

சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக

  • தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
  • தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
  • தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
  • தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
Ans:- B
62.

ஒருமைப்பன்மை பினழயற்ற தொடரைத் தேர்க

  • தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
  • தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
  • தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
  • தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
Ans:- B
63.

இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _____
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு

  • படை
  • பொழுது
  • செல்வம்
  • பகை
Ans:- B
64.

தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்

  • உழவு செய்தல்
  • பயிர் செய்தல்
  • விளைவித்தல்
  • உதவி செய்தல்
Ans:- D
65.

துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்

  • தேம்பாவணி
  • கம்பராமாயணம்
  • சீவக சிந்தாமணி
  • மணிமேகலை
Ans:- B
66.
Tnpsc General Tamil Online Notes - 018-1

"கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • குறுந்தொகை
  • நற்றிணை
  • அகநானூறு
  • புறநானூறு
Ans:- A
67.

"உடல்வாடினாலும் பசி மீறினாலும் – வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்" என்று பாடியவர்

  • வாணிதாசன்
  • சுரதா
  • தாராபாரதி
  • பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
Ans:- D
68.

சுமார்எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?

  • முதலாம் இராசராச சோழன்
  • இரண்டாம் இராசராச சோழன்
  • முதலாம் இராசேந்திரன்
  • இரண்டாம் இராசேந்திரன்
Ans:- B
69.

பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார்?

  • வாணிதாசன்
  • சுரதா
  • உடுமலை நாராயணக்கவி
  • பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
Ans:- C
70.

திரைக்கவி திலகம் மருதகாசி அவர்கள் வாழ்ந்த காலம்

  • 1930 - 1989
  • 1933 – 1989
  • 1920 – 1998
  • 1920 – 1989
Ans:- D
71.

ந. பிச்சமூர்த்திஅவர்கள் கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றிய காலம்

  • 1924-1938
  • 1925-1937
  • 1938-1954
  • 1937-1953
Ans:- C
72.

“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும்”
என்று சங்கரதாசு சுவாமிகளை புகழ்ந்தவர் யார்?

  • வ.வே.சு
  • திரு.வி.க
  • அண்ணா
  • புத்தனேரி சுப்ரமணியம்
Ans:- D
73.

தவறானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடு

  • அப்பம் தின்
  • பழம் சாப்பிடு
  • உணவு உண்
  • மலர் கொய்
Ans:- B
74.

கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

  • தகப்பன்
  • தகப்பன் பாசம்
  • தகப்பன் கொடி
  • தகப்பன் மலர்
Ans:- C
75.

மகேந்திரவர்மபல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எந்நூற்றாண்டில் இயற்றினார்

  • 6ம் நூற்றாண்டு
  • 7ம் நூற்றாண்டு
  • 8ம் நூற்றாண்டு
  • 9ம் நூற்றாண்டு
Ans:- B
76.

புலமைக்கடலானதமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் மதுரையில் அரங்கேறிய ஆண்டு

  • 1941
  • 1942
  • 1943
  • 1944
Ans:- B
77.

ஞாயிற்றைச்சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்

  • புறநானூறு
  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
Ans:- A
78.

ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம், சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

  • மேற்க்கதுவாய் எதுகை
  • கீழ்க்கதுவாய் எதுகை
  • முற்றெதுகை
  • கூழை எதுகை
Ans:- B
79.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

  • மா முன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை
  • காய் முன் நிரைவருவது ஒன்றிய வஞ்சித்தளை
  • காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை
  • விளம்முன் நிரைவருவது நிரையொன்றாசிரியத் தளை
Ans:- B
80.

யார் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்துத் திறைப் பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது

  • இரவிவர்மா
  • நரசப்பையன்
  • ஷாஜி
  • பாலாஜி பண்டிதர்
Ans:- B
81.

தென்னாப்பிரிக்கவரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் _____ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  • இந்தியன் ஒப்பீனியன்
  • தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
  • உப்புச் சத்தியாகிரகம்
  • இந்தியன் சஞ்சிகை
Ans:- B
82.

எம்.ஜி.ஆர்சென்னை மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரான ஆண்டு

  • 1963
  • 1967
  • 1968
  • 1969
Ans:- A
83.

"புத்திக்குள்உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந் துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்"
இப்பாடலை இயற்றியவர்

  • பாரதிதாசன்
  • உடுமலை நாராயணக் கவி
  • கம்பர்
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Ans:- D
84.

"திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் " என்று பாடியவர் யார் ?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
85.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

  • தமிழ்கெழு கூடல் – புறநானூறு
  • தமிழ்வேலி – பரிபாடல்
  • கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் – மணிவாசகம்
  • பண்ணொடு தமிழொப்பாய் – திருவாசகம்
Ans:- D
86.

கீழ்க்கண்டவற்றுள்வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

  • இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
  • நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
  • ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
  • வன்தொடர் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.
Ans:- C
87.

"வேடத்தால்குறையாது முந்நூல் ஆக
வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந்தகப்பட்டேம் கரந்தேம் “
என்ற வரிகள் இடம்பெறும் நூல்

  • அழகர் கிள்ளை விடு தூது
  • கலிங்கத்துப்பரணி
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  • பெத்தலகேம் குறவஞ்சி
Ans:- A
88.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

  • எந்நாளோ - பாரதிதாசன்
  • பூக்கட்டும் புதுமை – முடியரசன்
  • விடுதலை விளைத்த உரிமை – ந. கருணாநிதி
  • தளை – சிற்பி பாலசுப்பிரமணியம்
Ans:- C
89.

சரியானஇணையைத் தேர்ந்தெடு

  • வேலி – செயப்பிரகாசம்
  • கிழிசல் – வண்ணதாசன்
  • மூக்கப் பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்
  • பழிக்குப்பழி – சேதுபதி
Ans:- C
90.

அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை

  • 4 - 8 அடி
  • 9 - 12 அடி
  • 13 - 31 அடி
  • 3 – 4 அடி
Ans:- C
91.

கூதிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?

  • ஆவணி, புரட்டாசி
  • ஐப்பசி, கார்த்திகை
  • மார்கழி, தை
  • மாசி, பங்குனி
Ans:- B
92.

"மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி”
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்

  • அகநானூறு
  • புறநானூறு
  • ஐங்குறுநூறு
  • குறுந்தொகை
Ans:- C
93.

“மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது"
என்ற வரிகள் யாருடையது?

  • தாராபாரதி
  • நாமக்கல் கவிஞர்
  • கவிமணி
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Ans:- D
94.

கன்னியாகுமரியில்காமராசருக்கு மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?

  • 01.02.2000
  • 02.10.2000
  • 10.02.2000
  • 20.10.2000
Ans:- B
95.

காமராசரைக்கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?

  • அண்ணா
  • திரு.வி.க
  • கல்கி
  • பெரியார்
Ans:- D
96.

அண்ணாநூற்றாண்டு நூலகம் குறித்த செய்திகளில் தவறானது எது?

  • முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  • மூன்றாம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா
  • ஐந்தாம் தளம் -கணிதம், அறிவியல், மருத்துவம்
Ans:- B
97.

அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடும் மாநிலங்களில் தவறானது எது

  • ஆந்திரா
  • கர்நாடகா
  • மகாராட்டிரா
  • ஒடிசா
Ans:- D
98.

நாவின்நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து

Ans:- C
99.

"உள்ளம் உடைமை உடைமைபொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் " – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்

  • ஊக்கமுடைமை
  • பயனில சொல்லாமை
  • கள்ளாமை
  • விருந்தோம்பல்
Ans:- A
100.

“அஞ்சாமைமிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
என்று பாடியவர்

  • கண்ணதாசன்
  • வைரமுத்து
  • முடியரசன்
  • கவிமணி
Ans:- C
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Model Test - 025
Tnpsc General Tamil Online Model Test - 025 Tnpsc General Tamil Online Model Test - 025 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 003
Tnpsc General Tamil Online Model Test - 003 Tnpsc General Tamil Online Model Test - 03 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 023
Tnpsc General Tamil Online Model Test - 023 Tnpsc General Tamil Online Model Test - 023 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 014
Tnpsc General Tamil Online Model Test - 014 Tnpsc General Tamil Online Model Test - 014 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share