Tnpsc General Tamil Online Notes - 016
TNPSC General Tamil Online Notes - 16 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
“மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட... “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- திருவள்ளுவமாலை
- தமிழோவியம்
- பிங்கல நிகண்டு
- நன்னூல்
"குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ “ இதில் கூறப்படும் மூன்று இனங்கள் எவை?
- துறை, தாழிசை, விருத்தம்
- குறம், பள்ளு, பா
- செறிவு, சமநிலை, தெளிவு
- சத்துவம், இராசசம், தாமசம்
பொருத்துக
இரும்போந்து i) பருத்த பனைமரம்
சந்து ii) சந்தன மரம்
நாகம் iii) நாகமரம்
காஞ்சி iv) ஆற்றுப்பூவரசு
- i ii iii iv
- iii ii i iv
- iv iii ii i
- iii ii iv i
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது _____ துறை .
- இயன் மொழித் துறை
- பொதுவியல் துறை
- பொருண்மொழிக் காஞ்சித் துறை
- பாடாண் துறை
கீழ்க்கண்டவற்றுள் கூட்டு வினைகனின் மூன்று வகைகள் யாவை?
1.பெயர்+ வினை = வினை 2. வினை + வினை = வினை
3. இடை + வினை = வினை 4. இடை + இடை = வினை
- 1, 2, 3
- 2, 3, 4
- 1 , 3, 4
- 1, 2,4
சிலப்பதிகாரத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது ?
- காதை 1 - அடி 102
- காதை 41 - அடி 16
- காதை 5 - அடி 102
- காதை 6 - அடி 102
சரியான இணையைத் தேர்ந்தெடு
கடைபிடித்தல் –பின்பற்றுதல்
கடைப்பிடித்தல் – கடையைப்பிடித்தல்
- அனைத்தும் சரி
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் தவறு
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – பொருத்துங்கள்
- பொருத்து + உங்கள்
- பொருத்து + உம் + கள்
- பொரு+த் + உங்கள்
- பொரு + து + உங்கள்
கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
- வளர்மதி அவர்கள் அரியலூரில் பிறந்தவர் .
- 2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார்.
- இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார்.
- 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
பொருத்துக
முத்துலெட்சுமி i) உயர்வு
பண்டித ரமாபாய் ii) புரட்சி
இராமாமிர்தம் iii) துணிவு
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் iv) அறிவு
சாவித்திரிபாய் பூலே v) சிறப்பு
- iii i ii v iv
- iii ii i iv v
- ii i iii v iv
- i ii iii iv v
சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- 1919
- 1939
- 1929
- 1949
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?
- முசிறி
- கொற்கை
- தொண்டி
- காவிரிப்பூம்பட்டினம்
பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
பரங்குன்ற முருகன் நின்னசோலை "
என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன
- மதுரைக் காஞ்சி
- நான்மாடக்கூடல்
- காவடிச் சிந்து
- நொண்டிச்சிந்து
ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்
- மதுரை
- திருநாதர்குன்று
- திருப்பரங்குன்றம்
- வேலூர்
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
- 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- 4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- 5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
“சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி
- பெயரெச்சம்
- வியங்கோள் வினைமுற்று
- வினையெச்சம்
- வினைத்தொகை
'பெருமரத்துடன் போட்டியிடுகிறது' என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?
- கமுகு
- தென்னை
- பனை
- மூங்கில்
ந.பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?
வழக்குறைஞர்
ஆசிரியர்
உயர்நீதிமன்ற நீதிபதி
இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்
- 1, 2
- 1, 3
- 1, 2, 3
- 1, 4
“ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
- மல்லர்
- மணக்குடவர்
- பரிப்பெருமாள்
- பரிதி
"நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?
- 27
- 28
- 37
- 38
விரைந்து கெடுபவன் யார்?.
- பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
- பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் துணையாசிரியராக பணியாற்றிய நாளிதழ்
- கணையாழி
- தினமணி
- அ, ஆ இரண்டும்
- தினமலர்
"நூபுரத்துத் தொனி வெடிக்கும் – பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
- திருமலை முருகன் பள்ளு
- காவடிச் சிந்து
- ஐங்குறுநூறு
- சிலப்பதிகாரம்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது
- தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
- மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
- தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
- மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
" மனிதனின் பேச்சுத் திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு
- 1881
- 1886
- 1868
- 1861
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
- புறநானூறு – 188
- புறநானூறு – 183
- அகநானூறு – 188
- அகநானூறு – 183
பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு
- 1826
- 1835
- 1854
- 1857
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்
- துய்ப்ளே
- துய்மா
- டூமாஸ்
- லெபூர் தொனே
"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்
- அண்ணா
- திரு.வி.க
- உ.வே.சா
- வ.வே.சு
"கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர்
- பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
- முதலாம் நரசிம்மவர்மன்
- கோவிந்தசாமி
- இராசசிம்மன்
ண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.
- ஃபாஸ்ட் ஓவியங்கள்
- ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்
- ஃப்ரஷ் ஓவியங்கள்
- மேற்கண்ட எதுவுமில்லை
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகள் எவை?
ரத்னா பாயின் ஆங்கிலம்
ஒரு புளியமரத்தின் கதை
செம்மீன்
காகங்கள்
- அனைத்தும் சரி
- 1, 2, 4
- 1, 2, 3
- 1, 4
'' அழைத்தான் >>>அழை + த் + த் + ஆன் "
இதில் ‘ த் + த்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் முறையே
- இறந்தகால இடைநிலை, சந்தி
- சந்தி, இறந்தகால இடைநிலை
- சாரியை, இறந்தகால இடைநிலை
- இறந்தகால இடைநிலை, சாரியை
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு " என்று கூறியவர் யார்?
- பாரதிதாசன்
- குமட்டூர்க் கண்ணனார்
- திருவள்ளுவர்
- ஒளவையார்
கீழ்க்கண்டவற்றுள் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
- குண்டலினி சக்தி
- அமுதம்
- மாங்காய்ப் பால்
- அமுதப்பால்
பொருத்துக.
ஈசத்துவம் i) படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
பிராகாமியம் ii) இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
காமாவசாயித்வம் iv) விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
வசித்வம் v) உலகப்படைப்புகளை அடக்கி ஆளும் ஆற்றல்
- i ii iii iv
- ii i iv iii
- iv iii ii i
- iv ii iii i
"நிற்கின்றாய் >>> நில் ( ற் ) + கின்று + ஆய் " என்பதில் 'ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
- முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
- படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
இலக்கணக் குறிப்புத் தருக .
உருட்டி, ஏகுமின்
- பெயரெச்சம், வினையெச்சம்
- வினையெச்சம், பெயரெச்சம்
- வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
- பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
இலக்கணக் குறிப்புத் தருக
வாய்க்கால், ஏகுதி
- உரிச்சொற்றொடர் , வினையெச்சம்
- பெயரெச்சம், வினையெச்சம்
- இலக்கணப்போலி, ஏவல் ஒருமை வினைமுற்று
- பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று
ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
- பேரழகு
- காலத்தச்சன்
- உழுதுழுது
- சென்ற
பொருத்துக.
பியர் பால் ப்ரோக்கா i) பிரெஞ்சு சர்ஜன்
நோம் சோம்ஸ்கி ii) அமெரிக்க உளவியல் மொழியியலாளர்
ஆட்டோ டியட்டர்ஸ iii) ஜெர்மானியர்
க்வாபெனா போஹென் iv) ஸ்டான்போர்டு பேராசிரியர்
- i ii iii iv
- iii i ii iv
- ii i iii iv
- ii i iv iii
காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி
- மெகஸ்தனிஸ் - சீன பயணி
- மெகஸ்தனிஸ் - இத்தாலிய பயணி
- யுவான் சுவாங் – இத்தாலிய பயணி
- யுவான் சுவாங் – சீனப் பயணி
மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ள மூளையின் பாகம்
- முன்மூளை
- பின் மூளை
- நடு மூளை
- முதுகுத் தண்டு
புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.
- இங்கிலாந்து
- மணிலா
- போர்ச்சுக்கல்
- இலங்கை
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு
- அரிக்கமேடு கல்வெட்டு
- மண்டகப்பட்டு கல்வெட்டு
- மகாபலிபுரம் கல்வெட்டு
- சித்தன்னவாசல் கல்வெட்டு
வடமொழியில் " மலய " என்ற சொல் எப்பகுதியில் உள்ள மலைகளை குறிக்கிறது
- மலபாருக்கு கிழக்கே உள்ள மலைகளை
- மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை
- மலபாருக்கு வடக்கே உள்ள மலைகளை
- மலபாரை சுற்றியுள்ள மலைகளை
சரியான பொருளைத் தேர்ந்தெடு
மடிவு , வட்டம்
- மடிப்பு , எல்லை
- சோம்பல் , எல்லை
- மடிப்பு , உருவம்
- பணிவு ,எல்லை
முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
- காந்தி
- நேரு
- தெறென்ஸ்
- கோர்டன் ஆல்போர்ட்
தெலுங்கு , கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது .
- சோழர்கள் காலம்
- பாண்டியர்கள் காலம்
- நாயக்கர் காலம்
- விஜயநகர மன்னர் காலம்
சரியானவற்றைக்காண்க
1.யான்+கு= எனக்கு
2.யான்+ கண்= என்னின்கண்
3.யான்+அது= என்னது
4.யான்+ஆல்= என்னால்
- 2, 3 சரி
- 1, 2 சரி
- 1, 4 சரி
- நான்கும் சரி
அறவணஅடிகள் ‘அறிவுண்டாகுக’ என யாரை எல்லாம் வாழ்த்தினார்?
- அரசமாதேவி, தோழியர் கூட்டம்
- சித்திராபதி
- மணிமேகலை
- அனைவரையும்
'சாதியும்மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ - எனப் பாடியவர்
- திருமூலர்
- பெரியார்
- வள்ளுவர்
- வள்ளலார்
'Charity begins at home’ என்பதற்குஇணையான தமிழ்ப் பழமொழி
- தன்கையே தனக்குதவி
- அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
- தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
- வீட்டிலேயே தானம் செய்
பெருமாள் திருமொழியில் _______ பாசுரங்கள் உள்ளன
- இருநூற்றைந்து
- நூற்றைந்து
- நூறு
- பதினெட்டு
"எல்லாமனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்
- பெரியார்
- அண்ணல் அம்பேத்கர்
- காந்தியடிகள்
- திரு.வி.க
பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
வினைத்தொகை
- பொங்குதாமரை
- பூதரப்புயம்
- அலைகடல்
- அகல்முகில்
ஒருமைபன்மை பிழைகளை நீக்குக நான் வாங்கிய நூல் இது அல்ல
- நான் வாங்கிய நூல் இஃது அல்ல
- நான் வாங்கிய நூல் இஃது அன்று
- நான் வாங்கிய நூல் இது அன்று
- நான் வாங்கின நூல் இது அன்று
"நிலத்தினும்பெரிதே வானினும் உயர்ந்தன்று “ என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
- அகநானூறு
திருத்தொண்டர்புராணம் எனும் பெரிய புராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?
- திருத்தொண்டத்தொகை
- திருவாசகம்
- திருமந்திரம்
- திருக்கோவையார்
சுருதிமுதல் - என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது
- யூதர்
- இயேசு நாதர்
- சீடர்
- குற்றவாளி
திரு.வி.கவின் செய்யுள் நூல்கள்
1.உரிமைவேட்டல்
2.சைவத்திறவு
3.பொருளும் அருளும்
4.கடவுட்காட்சியும் தாயுமானவரும்
- 2, 3 – சரி
- 1, 2 சரி
- 1, 3 சரி
- நான்கும் சரி
எழுத்துஎன்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல்கள்
- நற்றிணை, குறுந்தொகை
- அகநானூறு, புறநானூறு
- பரிபாடல், குறுந்தொகை
- குறுந்தொகை, புறநானூறு
பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
உரிச்சொற்றொடர்
- நெடுநாவாய்
- நனி கடிது
- நன்னுதல்
- நின்கேள்
உடற்பிணியைப்போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்
அகத்தியர்
தேரையர்
போகர்
புலிப்பாணி
- 1, 4 சரி
- 1, 3, 4 சரி
- 2, 4 சரி
- 1, 2, 3, 4 சரி
விடைக்கேற்றவினாவைக் கண்டறிக.
- திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
- திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப் படம் எடுப்பது கடினமான பணியாகும்?
- திரைப்படம் எடுப்பதனை விட கடினமான பணி எது?
- திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?
கொடுக்கப்பட்டசொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க
- மான்குட்டி
- சிங்கக் குருளை
- கீரிக்குட்டி
- கழுதை கன்று
பழையஇலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்து தற்போது வழக்கில் இல்லாத எழுத்துக்கள்
- ஞ், ந், வ்
- ஞ், ண், ந்
- ஞ், ண், ன்
- ஞ், ன், ழ்
‘ங்' என்னும்மெல்லின மெய் ‘ஙனம்' என்னும் சொல்லில் கீழ்க்கண்ட எந்த பொருளில் வரும்
- வீதம்
- விதம்
- அங்கு
- இங்கு
தமிழ்அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கிய ஆண்டு
- 1958
- 1938
- 1982
- 1983
ஆற்றவும்கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை" என்ற வரிகளை இயற்றியவர்
- ஒளவையார்
- முன்றுறை அரையனார்
- சமண முனிவர்கள்
- கம்பர்
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
- பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
- பெர்னார்ட் ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
- டால்ஸ்டாய் – ஆங்கில நாடக ஆசிரியர்
"அறிவுஎன்பது வளர்ந்து கொண்டே இருக்கும்; எனவே, புதியவற்றை ஏற்க வேண்டும்" என்று கூறியவர் யார்?
- அம்பேத்கர்
- பெரியார்
- அம்புஜத்தம்மாள்
- நேரு
"ஆங்கிலமோபிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாண்கின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி” என்று கூறியவர்
- ந.பிச்சமூர்த்தி
- முடியரசன்
- மீரா
- கண்ணதாசன்
கரிகாலன்முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்று கூறும் நூல்
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பட்டினப்பாலை
- மதுரைக்காஞ்சி
இந்தியாவில்எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன? அவற்றுள் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
- 12, 353
- 12, 325
- 13, 325
- 12, 353
கரிசலாங்கண்ணிகுணமாக்கும் நோய்களில் சரியானது எது?
இரத்தசோகை
நரையைபோக்கும்
செரிமானகோளாறு
மஞ்சள்காமாலை
கண்பார்வை
- 1, 2, 5 சரி
- 2, 3, 4 சரி
- 2, 4, 5 சரி
- அனைத்தும் சரி
வெறியாட்டுப்பறை, தொண்டகப்பறைஆகியவை எந்நிலத்துடன் தொடர்புடையது
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
வடக்குஎன்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும் போது
- நிலைமொழி ஈறு நீங்கும்
- நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
- வருமொழி முதல் கெடும்
- நிலைமொழி முதல் கெடும்
கீழ்க்கண்டவற்றுள்தாராபாரதி எழுதாத நூலினைத் தேர்ந்தெடு
- புதிய விடியல்கள்
- விரல்நுனி வெளிச்சங்கள்
- பூமியைத் திறக்கும் பொன்சாவி
- இமயம் எங்கள் காலடியில்
பெண்களின்தெரிவை பருவ வயது
- 8 – 11
- 12 – 13
- 20 – 25
- 26 – 32
இணையத்திற்குவித்திட்ட ஜான்பாஸ்டல் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
- சுவிட்சர்லாந்து
- இங்கிலாந்து
- பிரான்சு
- அமெரிக்கா
தில்லியிலுள்ளதிகார் சிறைச்சாலையின் நிலைப்பற்றி கண்டறிந்து வெளியிட்டப் பத்திரிக்கை
- தி இந்து
- இண்டியன் எக்ஸ்பிரஸ்
- லண்டன் டைம்ஸ்
- இண்டியன் டைம்ஸ்
மீசைக்கும்கூழுக்கும் ஆசைப்பட்டு மேல் விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் என்று பாடியவர்
- பாரதிதாசன்
- முடியரசன்
- சச்சிதானந்தன்
- பாரதியார்
செல்வமும், உழைப்பும்இல்லாத கல்வி களர்நிலம் என்று கூறியவர்
- அம்பேத்கர்
- காமராசர்
- பெரியார்
- காந்தியடிகள்
செய்வாயா? என்னும்வினாவிற்கு கை வலிக்கும் எனத் தனக்கு வரப்போவதனை கூறுவது
- இனமொழி விடை
- உறுவது கூறல் விடை
- உற்றதுரைத்தல் விடை
- வினா எதிர்வினாதல் விடை
திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை____
- 568
- 865
- 685
- 658
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர்
- வள்ளலார்
- முத்துராமலிங்க தேவர்
- பெரியார்
- காமராஜர்
ஊரும்பேரும், தமிழினம் என்ற நூலை எழுதியவர்
- மீனாட்சி சுந்தரனார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- உ.வே.சா
- பாவாணர்
ஆர்கலிஉலகத்து என ஒவ்வொரு பத்துப் பாடல்களுக்கும் ஒருமுறை தொடங்குவது
- முதுமொழிக் காஞ்சி
- முதுமொழி மாலை
- முகுந்த மாலை
- பழமொழி நானூறு
காந்தியடிகள்தலைமையேற்ற இலக்கிய மாநாடு சென்னையில் எப்போது நடைபெற்றது
- 1935
- 1937
- 1939
- 1940
காந்தியடிகளிடம்உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
- கோவை
- மதுரை
- தஞ்சாவூர்
- சிதம்பரம்
எந்தஇடத்தில் நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்?
- இராமநாதபுரம்
- திருநெல்வேலி
- திண்டுக்கல்
- காளையார்கோவில்
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
பூதலம், கும்பி
- மலர், மழை
- சோலை, வயிறு
- பூமி, வயிறு
- பூமி, மழை
"பூதலந்தன்னை நரகம் அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும் ஐயா" என்ற பாடலை இயற்றியவரின் காலம்
- 18ம் நூற்றாண்டு
- 19ம் நூற்றாண்டு
- 20ம் நூற்றாண்டு
- சங்க காலம்
தோட்டத்தில்மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி”
என்ற பாடலை பாடியவர்
- பாரதிதாசன்
- கவிமணி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
- நாமக்கல் கவிஞர்
தமிழன்என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இவக்கியம் எது?
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- அப்பர் தேவாரம்
‘இடப்புறம்’ என்றசொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
- இடது + புறம்
- இடன் + புறம்
- இட + புறம்
- இடப் + புறம்
'நிலம்தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் " எனக் கூறும் நூல்
- கார்நாற்பது
- தொல்காப்பியம்
- பதிற்றுப்பத்து
- நற்றிணை
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- கொங்கு – தேன்
- திகிரி – ஆணைச் சக்கரம்
- அளி – கருணை
- நாமநீர் -அச்சம் தரும் கடல்