Tnpsc General Tamil Online Notes - 017
"TNPSC General Tamil Online Notes - 17 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 017
TNPSC General Tamil Online Notes - 17 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி அல்லாதது எது?
- இருளா
- மலையாளம்
- தெலுங்கு
- கன்னடம்
பொருத்துக.
வீசம் i) 1/16
கால் வீசம் ii) 1/64
அரைவீசம் iii) 1/32
முக்கால் வீசம் iv) 3/64
மூன்று வீசம் v) 3/16
- i ii iii iv v
- ii iii iv iv v
- iii ii i v iv
- iv v iii ii i
பொருத்துக.
மாடு i) பக்கம்
நெருங்குவளை ii) நெருங்குகின்ற சங்குகள்
கோடு iii) குளக்கரை
ஆடும் iv) நீராடும்
துதைந்து எழும் v) கலக்கி எழும்
- i ii iii iv v
- ii v iii i ii
- iv iii v ii i
- iii ii iv v i
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
2. திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
3. திருத்தொண்டர் புராணம் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது.
- அனைத்தும் சரி
- 1, 2 சரி
- 2 , 3 சரி
- 1 , 3 சரி
ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாலை நில மக்களின் ____ உடனும் பிணைந்தது.
- அடையாளம், தொழில் உற்பத்தி, போக்குவரத்துத் தொழில்
- தொழில் உற்பத்தி, அடையாளம், போக்குவரத்துத் தொழில்
- அடையாளம், போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி
- போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி, அடையாளம்
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
குழீஇ,தோம்
- பள்ளம், இசை
- ஒன்றுகூடி, இசை
- ஒன்றுகூடி , குற்றம்
- பள்ளம், குற்றம்
இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது
- அமெரிக்கா, 1979
- கனடா, 1979
- அமெரிக்கா, 1989
- ஆஸ்திரேலியா, 1989
கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _____ முறையும் மாநில அரசின் விருதினை _____ முறையும் பெற்றுள்ளார்.
- 6, 7
- 7, 6
- 5, 6
- 6,5
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
- சாவித்திரிபாய் பூலே
- முத்துசுலெட்சுமி
- பெரியார்
- ஹண்டர்
இலக்கணக் குறிப்பு தருக . மலர்க்கை , வில்வாள்
- உம்மைத் தொகை , உவமைத்தொகை
- உவமைத்தொகை , உம்மைத் தொகை
- பெயரெச்சம் , வினையெச்சம்
- வினையெச்சம் , பெயரெச்சம்
காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
- புறனாநூறு
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
- கலித்தொகை
பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?
- ஹிப்பல்ஸ்
- அகஸ்தஸ் சீஸர்
- நெடுஞ்செழியன்
- யவனர்
இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
- கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்
- புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில்
- கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில்
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
- - - - - - - - - - - - - - -
பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன "
என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
- மணிமேகலை
- திவாகர நிகண்டு
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
சங்ககாலத்தில் "ஐம்படைத்தாலி " என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
- பெண்கள்
- ஆண்கள்
- சிறுவர்
- சிறுமியர்
"புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்" - இவ்வரிகள் இடம்பெறும் நூல்
- தொல்காப்பியம்
- நன்னூல்
- அகத்தியம்
- புறநானூறு
_____ என்னும் அருங்குணத்தை பெரியார் பெரிதும் வலியுறுத்தி அதற்கேற்பத் தானும் வாழ்ந்துக் காட்டினார்.
- தன்னிறைவு
- சினமின்மை
- சிக்கனம்
- நகைச்சுவை
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மலர்ச்சி
- மலர்+சி
- மலர்+ச்+ச்+இ
- மலர்+ச்+சி
- மலர்+ச்+இ
____ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
- புறத்திணை
- அகத்திணை
- சங்க இலக்கியம்
- உரைநடை
தமிழ் மக்கள் " சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் _____ எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.
- இத்தாலியன்ஸ்
- சைமன்ஸ்
- சாப்பியன்ஸ்
- உரோமன்ஸ்
அழகிய பெரியவன்குறித்த கூற்றுகளில் சரியானது எது?
- விழுப்புரம் மாவட்டம் பேரணாம்பட்டை என்னும் ஊரில் பிறந்தார்
- இவரது இயற்பெயர் அரவிந்தன்
- தகப்பன் கொடி என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார்.
- கனடாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்
காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் ----- என அழைக்கப்படுகின்றனர்
- காட்டின் அடையாளம்
- காட்டின் மூலவர்
- காட்டின் வளம்
- காட்டின் கொடை
கீழ்க்கண்டவற்றுள்நட்பெழுத்துக்கள் அல்லாதது எது?
- ங் – க்
- ண் – ட்
- ன் – ட்
- ந் – த்
வருகின்ற >>>வா (வரு) +கின்று + அ
- இதில் "கின்று, அ" என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
- இறந்த கால இடைநிலை, பெயரெச்ச விகுதி
- நிகழ்கால இடைநிலை, வினையெச்ச விகுதி
- இறந்த கால இடைநிலை, வினையெச்ச விகுதி
- நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி
“ அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே "
என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
- வெண்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- நேரிசை ஆசிரியப்பா
இலக்கணக் குறிப்பு தருக .
உண்டல், துஞ்சல்
- வினைமுற்று
- அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
- வினையெச்சம்
- தொழிற்பெயர்
சராசரி மூளையின் எடை எவ்வளவு?
- 1 கிலோ
- 2 கிலோ
- 2 1/2 கிலோ
- 1 1/2 கிலோ
'மனமும் மூளையும் வேறு " என்று கூறிய தத்துவஞானி
- டெஸ்கார்ட்டெஸ்
- டியட்டர்ஸ்
- பித்தகோரஸ்
- பியர் பால் ப்ரோக்கா
அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்
- மீரா
- சுஜாதா
- தமிழன்பன்
- கல்யாணசுந்தரனார்
சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்
சிறுவன் மாணவன்
கேட்போன் 4. வாசிப்போன்
- அனைத்தும் சரி
- 2, 3, 4 சரி
- 1, 2, 3 சரி
- 2 , 3 சரி
கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.
- பள்ளிகள்
- மன்றம்
- சான்றோர் அவை
- சபை
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது ?
- ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது .
- துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
- 100க்கு 220 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
- வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றை பெற்றுப் பாதுகாத்துள்ளார்
சரியான பொருளைத் தேர்ந்தெடு

பூரணம், காய்ந்த
- சிறந்த, சிறந்த
- நிறைவு, நிறைவு
- நிறைவு, சிறந்த
- நெருங்கிய, சிறந்த
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென
- மனை + என –> மனை + ஐ + அன –> மனையென
- மனை + என –> மனை + ய் + என –> மனையென
- மனை + என்ன –> மனை + ய் + என்ன –> மனையென
- மனை + என்ன –> மனை + யெ + என்ன –> மனையென
கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்
- மதுசூதனன்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
- மீரா
- பாரதியார்
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற
- பெற்று + அ
- பெறு + அ
- பெறு (பெற்று) + அ
- பெறு + ற் + அ
கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?
- அப்பர், திருமங்கையாழ்வார்
- மாணிக்கவாசகர் , பேயாழ்வார்
- மாணிக்கவாசகர் , திருமங்கையாழ்வார்
- அப்பர், பேயாழ்வார்
கீழ்க்கண்டவற்றுள் ப.ஜீவானந்தம் குறித்தவற்றுள் எது சரியானது ?
காந்தியவாதி சுயமரியாதை இயக்கப் போராளி
பொதுவுடைமை இயக்கத் தலைவர் தமிழ் பற்றாளர்
- அனைத்தும் சரி
- 3, 4 சரி
- 1 , 3, 4 சரி
- 2 , 3, 4 சரி
"கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை?"
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை?
- பாண்டியன் பரிசு
- புரட்சிக் கவி
- இருண்ட வீடு
- சேர தாண்டவம்
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
கனிகள், மணி
- உலோகங்கள், கல்
- மாணிக்கம், உலகம்
- உலோகங்கள், மாணிக்கம்
- மாணிக்கம், கல்
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் "
என்று பாடியவர் யார்?
- கடுவெளி சித்தர்
- பட்டினத்தார்
- பாரதி
- பாரதிதாசன்
"வென்றேன் என்பர் மனிதரெல்லாம் -பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றனர் "
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் ?
- தொலைந்து போனவர்கள்
- பிரமிள் கவிதைகள்
- ஆலாபனை
- பித்தன்
"நன்று என நகைத்துத் தரத்தகு பொருள் நீ நவில்க என"
- யார் யாரிடம் கூறியது ?
- கண்ணன் கன்னனிடம் கூறியது.
- கன்னன் கண்ணனிடம் கூறியது.
- கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது
- அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது
சரியான பொருளை தேர்ந்தெடு .
சீரியதூளி , சிறுகால்
- நுண்ணிய வால், வாய்க்கால்
- ஊஞ்சல் , சிறிய கொம்பு
- நுண்ணிய வால், சிறிய கொம்பு
- நுண்ணிய மணல் , வாய்க்கால்
இலக்கணக் குறிப்புத் தருக .
செய்தொழில்,அலைகடல், வீழருவி
- வினைத்தொகைகள்
- வினையெச்சங்கள்
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- வினைமுற்றுகள்
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- நீலகேசி
- மனோன்மணீயம்
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ______ என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.
- வளையாபதி
- குண்டலகேசி
- நாமகள் இலம்பகம்
- நரி விருத்தம் .
இலக்கணக் குறிப்பு தருக
வெண்குடை, இளங்கமுகு
- வினைத்தொகைகள்
- உவமைத்தொகைகள்
- பண்புத்தொகைகள்
- உம்மைத் தொகைகள்
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் _____ தத்துவஞானிகள் ஆவர்.
- ரஷ்ய
- சீன
- ஐரோப்பிய
- கிரேக்க
பொருத்துக
வாழ்பவன் i) காத்திருப்பவன்
வாழாதவன் ii) மருந்தாகும் மரமானவன்
தோன்றுபவன் iii) ஒத்ததறிபவன்
வெல்ல நினைப்பவன் iv) புகழ் பெறும் தன்மையுடையவன்
பெரும் பண்புடையவன் v ) இசையொழித்தவன்
- i ii iii iv v
- ii i iii v iv
- iii v iv i ii
- iv ii iii i v
"கடல்நீர் ஆவியாகி மேகம் ஆகும் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும் " என்ற அறிவியல் செய்தியை கூறும் பழந்தமிழ் இலக்கியம் அல்லாதது எது?
- முல்லைப்பாட்டு
- திருக்குறள்
- திருப்பாவை
- நற்றிணை
கீழ்க்கண்டவற்றுள்தவறானது எது?
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்
- ட, ண, ர, ல, ழ, ள,ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் ஒரு எழுத்து கூட சொல்லின் முதலில் வராது.
- ஞ், ண், ச், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய எழுத்துக்கள் 11 ம் மொழியின் இறுதியில் வரும்
- வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்
"வெற்றி மேல் வெற்றி பெற விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்க வேண்டும்" என்று கூறியவர்?
- கல்யாணசுந்தரம்
- மருதகாசி
- காமராஜர்
- இரா. அரங்கநாதன்
கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க
1.சிலஎழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
2.உயிரெழுத்துகளில்நெடிலுக்கு குறிலும் உயிர் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். அளபெடையில் மட்டும் நெடிலை தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்
- இரண்டும் சரி
- 1 சரி 2 தவறு
- 1 தவறு 2 சரி
- இரண்டும் தவறு
கீழ்க்கண்டவற்றுள்சரியான கூற்று எது?
1.மணிமேகலையைமணிபல்லவத் தீவில் கொண்டு சேர்த்தது மணிமேகலைமணிமேகலா தெய்வம்.
2.சித்திரைப்பெளர்ணமி முழு நிலவன்று அமுதசுரபி பாத்திரமானது வெளிவரும் என்று தீவதிலகை கூறினாள்.
3.ஏழைமக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம், உணவு கொடுத்தவர்களே உயிர்கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன் என்று ஆதிரை கூறினாள்.
4.அள்ளஅள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபியில் ஆதிரை உணவிட்டாள்.
- 1, 2 சரி
- 2 , 3 சரி
- 1, 3 சரி
- 1, 4 சரி
கூற்று: வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து
வினாப் பொருளைத் தருமானால் அது அகவினா எனப்படும்.
காரணம்: அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய
வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தருவது அக வினா ஆகும்.
- கூற்று சரி காரணம் தவறு
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் சரி
- கூற்று காரணம் இரண்டும் தவறு
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
வீரமாமுனிவர் எழுதிய தமிழ்க் கையேடு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
1927 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது.
4. காந்தியடிகளிடம் ராஜாஜி "இவர்தான் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரைக் கூறினார்
- 3, 4 சரி
- 1, 4 சரி
- 4 மட்டும் சரி
- அனைத்தும் தவறு
தவறானகூற்றைத் தேர்ந்தெடு
- இடுகுறிப் பொதுப் பெயர் – மரம்
- இடுகுறி சிறப்புப் பெயர் – மா
- காரணப் பொதுப் பெயர் – பறவை
- காரண சிறப்புப் பெயர் – காடு
தவறானகூற்றைத் தேர்ந்தெடு
- உள்ளூரிலேயே குழந்தைகள் நலப்பள்ளி
- ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி
- மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப் பள்ளி
- ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப் பள்ளி
ஆசியஜோதி நூலில் யாருடைய வரலாறு கூறப்படுகிறது
- வள்ளலார்
- புத்தர்
- கவிமணி
- திருநாவுக்கரசர்
பெரியார்குறித்த கூற்றுகளில் எது தவறானது?
13, 12, 000கி.மீ – பயணம்

2. 10, 700 மணி நேரம் – உரையாடல்
21,400 –கூட்டங்கள்
8600 – நாள்கள்
- 1, 2 சரி 3, 4 தவறு
- 1, 3 சரி 2, 4 தவறு
- 1, 4 சரி 2, 3 தவறு
- 2, 3 சரி 1, 4 தவறு
"எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை"
என்று பாடியவர் யார்?
- முடியரசன்
- தாராபாரதி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- பாரதியார்
முத்துராமலிங்கத்தேவர் கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்?
1936
1945
1951
1956
- அனைத்தும் சரி
- 2, 3, 4
- 1, 3, 4
- எதுவுமில்லை
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- அளைஇ - புற்று
- படிறு – வஞ்சம்
- அல்லவை – பாவம்
- நாடி – விரும்பி
"இராமானுஜன்தான்இந்த 20 நூற்றாண்டின் மிகப் பெரிய கணிதமேதை” என்று கூறியவர் யார்?
- லார்ட்மெண்ட் லண்ட்
- ஈ.டி.பெல்
- சூலியன் கச்சுலி
- இந்திரா காந்தி
“பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே -பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று பாடியவர் யார்?
- கம்பர்
- பாரதிதாசன்
- மருதகாசி
- கவிமணி
சரியானசொற்களைக் கொண்டு நிரப்புக.
நிறைநீர நீரவர் _____பிறைமதிப்
பின்நீர பேதையார் ____.
- நட்பு, பகை
- பகை, நட்பு
- நட்பு, கேண்மை
- கேண்மை, நட்பு
நீடூழி வாழ்க" என்பது எவ்வகைத் தொடர்?
- விழைவுத் தொ
- உணர்ச்சித் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
- எதிர்மறைத் தொடர்
"கண்ணகிபுரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் "முதலிய நூல்களை இயற்றியவர் யார்?
- திரு.வி.க
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – ஒறுத்தார்
- ஒரு + த் + ஆர்
- ஒரு + த் + த் + ஆர்
- ஒருத்து + ஆர்
- ஒரு + து + ஆர்
“உறாஅர்க்குறுநோய் ஊரப்பாய் “இத்தொடரில் ______ அளபெடை வந்துள்ளது.
- இன்னிசை
- செய்யுளிசை
- சொல்லிசை
- எதுவுமில்லை
"நிறையுயிர்முயற்சியின் உள்வளி துரப்ப
எழுமணுத் திரள் உரம் கண்டம் உச்சி
மூக்குற்று இதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே”
இப்பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது ?
- தொல்காப்பியம்
- நாலடியார்
- நன்னூல்
- புறநானூறு
கன்று+ ஆ என்பது ____ எனப் புணரும்
- கற்றா
- கன்றா
- கறா
- கற்ற
திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 675
- 657
- 685
- 658
சைவசித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
- 1901
- 1918
- 1919
- 1966
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி வடமொழியைக் கொண்டுவர பல்கலைக்கழகத்தாரால் எடுக்கப்பட்ட முடிவு ____ ஆண்டு பரிதிமாற்கலைஞரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
- 1901
- 1902
- 1903
- 1904
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?
- ஜி.யூ.போப்
- பாவாணர்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?
- தாயுமானவர்
- குமரகுருபரர்
- தஞ்சை வேதநாயக சாத்திரியார்
- செயங்கொண்டார்
பெத்தலகேம்குறவஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- உலாவரும் மன்னர் – இயேசு
- சிங்கன் – குரு
- நூவன் -உபதேசி
- பிடிக்கும் பறவைகள் – சீயோன்
கீழ்க்கண்டவற்றுள்பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய தூது நூல் எது?
- அன்னம் விடு தூது
- தென்றல் விடு தூது
- முகில் விடு தூது
- தமிழ் விடு தூது
"ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே"
என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
- குற்றாலக் குறவஞ்சி
- முக்கூடற்பள்ளு
- இசையமுது
- கலிங்கத்து பரணி
சரியானசொற்களை கொண்டு பொருத்துக.
உண்ணாது ___ பெரியர் பிறர்சொல்லும்
_____ னோற்பாரிற் பின்.
- இருப்பர், தகுதியால்
- நோற்பார், தகுதியால்
- இருப்பர், இன்னாச்சொல்
- நோற்பார், இன்னாச்சொல்
"கோழைமிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாம்"
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- திருப்பாவை
- தேவாரம்
- திருவாசகம்
- நாலாயிர திவ்ய பிரபந்தம்
அகரவரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
- மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
- மனத்துயர், மீமிசை, முந்நீர்,மேடுபள்ளம்
- மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
- முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
DUBBlNG, DIRECTOR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?
- படப்பிடிப்பு, இயக்குநர்
- நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
- ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
- படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
கணவனைத்தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
- காக்கைப்பாடினியார்
- காரைக்காலம்மையார்
- வெள்ளி வீதியார்
- நப்பசலையார்
'உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே ‘ - என்று தொடங்கும் பாடல் எந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
- செங்கீரைப்பருவம்
- முத்தம் பருவம்
- முத்தம் பருவம்
- அம்புலிப் பருவம்
தெய்வக்கவிஞர் என்றால் ____ என்று பொருள்படும்
- திவ்விய கவி
- அழகியமணவாளதாசர்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- குமரகுருபரர்
பொருந்தாததொடரைக் காண்க
- இழந்த பிறப்பாய் விடும்
- பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
- பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
- செல்வத்துப் பயனே ஈதல்
"வெறுத்தகேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
- நக்கீரர்
- இளங்கீரனார்
- பெருங்குன்றூர்க்கிழார்
- நப்பசலையார்
"வெஞ்சினவிறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே"
என்று பாடியவர் யார்?
- கபிலர்
- பேயனார்
- ஓரம்போகியார்
- ஓதலாந்தையார்
நல்லந்துவனார்நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள் ?
- 13
- 33
- 11
- 100
‘ஆதி கவி‘ என்று போற்றப்பட்டவர் யார்?
- கம்பர்
- வான்மீகி
- வியாசர்
- ஒட்டக்கூத்தர்
பொருந்தாச்சொல்லைக் கண்டறிக - மரக்கலம்
- வங்கம்
- அம்பி
- திமில்
- புணரி
'சமுதாயமெனும்மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்தாக இருந்தவர் ‘
- அண்ணல் காந்தியடிகள்
- அம்பேத்கர்
- தந்தை பெரியார்
- பாரதியார்
களிமண்பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
- ஆம்பூர்
- நிப்பூர்
- மேப்பூர்
- அரியலூர்
ஒத்தாரும்உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும் என பாடியவர்
- பெருந்தேவனார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
பிறமொழிச்சொல்லற்ற தொடர் எது?
- கண்ணன் காலையில் நாஷ்டா சாப்பிட்டான்
- அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும்
- கோவிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது
- பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்
ஐந்தடிமுதல்பன்னிரெண்டடி வரை வரும் பா
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
____என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்
- அருவினை
- நல்வினை
- தீவினை
- தன்வினை
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!