Tnpsc General Tamil Online Notes - 020
TNPSC General Tamil Online Notes - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i) வேப்பங்கொட்டை
ii) முருங்கை இலை
iii) புங்கன்
iv) உளுந்து
v) பிரண்டை
- ii , iii
- ii, iv
- ii, iv , v
- ii ,iv
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?
- காசிரங்கா புலி
- காசிரங்கா சிங்கம்
- காசிரங்கா குரங்கு
- காசிரங்கா காண்டாமிருகம்
பொருத்துக
எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
பஞ்சம் iv) இனமிகல்
- ii i iv iii
- iii i ii iv
- i ii iii iv
- i iv iii ii
பொருத்துக.
மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை–கேரளம்
மல மூத்தன் iv) ஜார்கண்ட்
- i ii iii iv
- ii i iii iv
- i iv iii ii
- iv iii ii i
மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்
- கேரளா
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கர்நாடகா
உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்" என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்
- நீலகேசி வாத சருக்கம்
- மொக்கல வாத சருக்கம்
- புத்த வாத சருக்கம்
- ஒலிச் சருக்கம்
சரியான இணை எது?
ரோமர் – ஒலியின் திசைவேகம்
பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்
- அனைத்தும் சரி
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- அனைத்தும் தவறு
இலக்கணக்குறிப்புத் தருக .
அரும்பும் மலரும், வெப்பம் குளிர்
- உம்மைத் தொகை, எண்ணும்மை
- எண்ணும்மை, உம்மைத் தொகை
- எண்ணும்மை ,பண்புத்தொகை
- பண்புத்தொகை, எண்ணும்மை
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
- புறநானூறு – 188
- புறநானூறு – 183
- அகநானூறு – 188
- அகநானூறு – 183
இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது
- தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
- 1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்
- ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்
- இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து
- மெலி +த்(ந்) + த் + உ
- மெலி + த் + த்(ந்) + உ
- மெலிந்து+உ
- மெலிந்+த்+உ
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
- எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்
- இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்
- ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்
- நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்
ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
- ஏ, கே, இன், எ
- ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
- ஏ, கே, ஈ, இன், ஐ
- எ , ஈ, இன்
"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்
- நிரை நேர்
- நிரை நிரை
- நேர் நிரை
- நேர் நேர்
திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.
- 51
- 38
- 58
- 85
இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
எப்படிப் பெயரிடுவேன் ?
இந்தியா 24 மணி நேரம்
காற்றைத் தவிர ஏதுமில்லை
- அனைத்தும்
- 1, 2
- 1 , 3
- 2 , 3
இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
- பத்ம பூஷண்
- பத்ம விபூஷண்
- பத்மஸ்ரீ
- துரோணாச்சார்யா விருது
பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"
- நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன்
- நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன்
- நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன்
- நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன்
“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
- ம.லெ.தங்கப்பா
- ஏ.கே.ராமானுஜம்
- ஆல்பர்காம்யு
- பிரம்மராஜன்
பொருத்துக
அந்நியன் i) ஆல்பர்காம்யு
உருமாற்றம் ii) காப்கா
சொற்கள் iii) ழாக் பிரவர்
குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
உலகக் கவிதைகள் v) எக்சு பெரி
- I ii iii iv v
- i iii ii v iv
- i ii iii v iv
- i iv v iii ii
''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- அகநானூறு
"வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத் தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ"
என்று பாடியவர் யார்?
- பாரதி
- பாரதிதாசன்
- தாராபாரதி
- சுரதா
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு .
சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்
- அனைத்தும் சரி
- 1, 2 சரி
- 2 , 3 சரி
- 1 , 3 சரி
"தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
என்று பாடியவர் யார்?
- பாரதி
- பாரதிதாசன்
- கடுவெளி சித்தர்
- வள்ளலார்
"கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- இல்குலாப்
- சுரதா
சரியான இணையை தேர்ந்தெடு
இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
- அனைத்தும் சரி
- 1, 2 சரி
- 2 , 3 சரி
- 1 , 3 சரி
கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?
- குயில்
- அன்னம்
- தென்றல்
- தேச பக்தன்
நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
- பொதுமை வேட்டல்
- முருகன் அல்லது அழகு
- இளமை விருந்து
- பெண்ணின் பெருமை
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?
- 1647
- 1467
- 1746
- 1476
"ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்ற!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- கண்ணதாசன்
- வைரமுத்து
- வாலி
- சுரதா
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
___இனம் 2. வண்ணம் _____
_____ குணம் 4. வனப்பு ____
- மூன்று , நூறு , பத்து, எட்டு
- எட்டு, நூறு, பத்து, மூன்று
- பத்து, நூறு, எட்டு, மூன்று
- நூறு , பத்து , எட்டு , மூன்று
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- உருபன் – Morpheme
- ஒளியன் – Phoneme
- ஒப்பிலக்கணம் – Comparative Grammer
- பேரகராதி – Lexicon
கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?
- தமிழ்ஒளி
- நாகலிங்கம்
- கவிமணி
- மா.அமரேசன்
பொருத்துக
உற்பத்திப் பொருள் (1 கிலோ) தண்ணீரின் அளவு (லிட்டர்)
ஆப்பிள் i) 822
சர்க்கரை ii) 1780
அரிசி iii) 2500
காப்பி கொட்டை iv) 18, 900
- i ii iii iv
- ii iii i iv
- iv iii ii i
- i iii ii iv
" ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
என்ற வரிகள் யாருடையது?
- தமிழ்ஒளி
- நாகலிங்கம்
- கவிமணி
- யூமா வாசுகி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்
- குறிப்பறிதல்
- ஒழுக்கமுடைமை
- பண்புடைமை
- அறிவுடைமை
"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று "
இக்குறளில் பயின்று வரும் அணி
- எடுத்துக்காட்டுவமை அணி
- உவமையணி
- பிறிது மொழிதல் அணி
- ஏகதேச உருவக அணி
கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.
1.ஒடிசா 2. கேரளா 3. கர்நாடகம்
4.ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்
- அனைத்தும்
- 1, 2, 3
- 2, 3, 4
- 3, 4, 5
சரியான பொருளை தேர்ந்தெடு
துவனம், துகலம்
- நுட்பமான ஒலி, ஒலி
- ஒலி, நுட்பமான ஒலி
- முழங்குதல், ஒலி
- முழங்குதல், நுட்பமான ஒலி
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?
- வியங்கோள் வினைமுற்று தொடர்
- வினைத் தொகை
- அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
- அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
- தேசியத் திறனாய்வுத் தேர்வு
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு
- தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
- மூன்றும் சரி
பொருத்தமான விடையைத் தேர்க
சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்
- i ii iii iv
- iii iv i ii
- iv iii ii i
- iii ii i iv
வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?
- உம்
- மட்டும்
- ஏ
- தான்
சரியான இணையை தேர்ந்தெடு .
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .
- அனைத்தும் சரி
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் தவறு
ஓங்கிய‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
- சந்தி
- சாரியை
- உடம்படுமெய்
- இறந்தகால இடைநிலை
பிழையை நீக்கி எழுதுக
" தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "
- தென்னையிலிருந்து நார் எடுத்தார்
- தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார்
- தென்னையிலிருந்து நார் உரித்தார்.
- தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் .
கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
- ' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் .
- ‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
- 'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் .
- வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்
ஜப்பானியர்கள் ஐ.என் .ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை , இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?
- கேரளா , தமிழ்நாடு
- ஆந்திரா , தமிழ்நாடு
- கேரளா, குஜராத்
- குஜராத் , தமிழ்நாடு
. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?
- தில்லான்
- பாரதியார்
- நேதாஜி
- முத்துராமலிங்கனார்
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க
- கா+ க்+க்+அ
- கா+க் + அ
- கா+ அ + க்+அ
- கா+க்+க
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?
- வைரமுத்து
- கல்கி
- வல்லிக்கண்ணன்
- நா. முத்துக்குமார்
தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வைரமுத்து
- முடியரசன்
பிரித்து எழுதுக : வீடினதன்றறன்
- வீடின + தன்று + அறன்
- வீடின + தன்றறன்
- வீடினது + அன்று + அறன்
- வீடினதன்று + அறன்
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
- அவன்
- எவன்
- இவன்
- உவன்
மரபு பிழைகளை நீக்குக
- எருது எக்காளமிடும்
- எருது கத்தும்
- எருது பிளிறும்
- எருது அலறும்
பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க .
- தோழிக்கு சம்பிரதாயப்படி மேரேஜ் நடந்தது
- தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
- தோழிக்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது
- தோழிக்கு மரபுப்படி மேரேஜ் நடந்தது
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
- மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டு செல்லும்
- மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டு செல்லும்
- மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
- மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி எறி
- மீ மாசு
- ஈ காசு
- தீ வீசு
- வீ ஏசு
மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
- மிக
- மிகல்
- மிகு
- மிகுதி
வெள’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- பல்லு
- கைப்பற்றுதல்
- மீட்டல்
- பள்ளு
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
- கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
- கற்கண்டு, கஞ்சி, கக்குவான், கக்குதல்
- கஞ்சி, கற்கண்டு, கக்குதல், கக்குவான்
- கக்குதல், கற்கண்டு, கக்குவான், கஞ்சி
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
- செய்தி வாக்கியம்
- தனி வாக்கியம்
- கலவை வாக்கியம்
- தொடர் வாக்கியம்
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
- அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளை விண்ணில் ஏவினர்
- அறிஞர்கள் அறிவியல் செயற்கைகோளை ஏவினர் விண்ணில்
- செயற்கைகோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது
- விண்ணில் அறிவியல் அறிஞர்கள் ஏவினர் செயற்கைகோளை
'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
- பயன்பெறுதல்
- மகிழ்ந்திருத்தல்
- பயனற்றுப்போதல்
- வெறுத்திருத்தல்
‘மயங்கி மதுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- கம்பர்
- குமரகுருபரர்
- ஒட்டக்கூத்தர்
மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
- தமிழிலக்கிய வரலாறு
- தமிழின்பம்
- கள்ளர் சரித்திரம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு
திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் காலம்
- 1823 – 1882
- 1832 – 1874
- 1823 – 1874
- 1824 – 1873
ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் தவறானது எது?
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை
அரசு ஆவணக் காப்பகம் – சென்னை
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி
சரஸ்வதி மகால் – தஞ்சாவூர்
- அனைத்தும் சரி
- 1, 2, 3 சரி
- 1, 2, 4 சரி
- 1 , 3, 4 சரி
நேரு தம் மகள் இந்திராவுக்கு _____ ஆண்டு முதல் _____ ஆண்டு வரை கடிதங்கள் இயற்றினார்.
- 1920 - 1960
- 1922 – 1962
- 1920 – 1962
- 1922 – 1964
நடுவண் அரசு முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
- 1964
- 1996
- 1997
- 1995
"பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி"
என்னும் பாடல் பொதுமை வேட்டல் நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது
- தெய்வ நிச்சயம்
- போற்றி
- வாழ்த்து
- பொதுமை
தவறான இணையைத் தேர்ந்தெடு
- பயக்கும் - பெறுதல்
- அன்ன - அவை போல்வன
- அமையும் – உண்டாகும்
- அகம் – உள்ளம்
'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்”
என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்
- தொல்காப்பியம்
- பரிபாடல்
- சிலப்பதிகாரம்
- தண்டியலங்காரம்
மோசிகீரனார் பாடிய பாடல்கள் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம்பெறவில்லை?
- நற்றிணை
- குறுந்தொகை
- அகநானூறு
- புறநானூறு
கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் ____ மரபில் பிறந்தார்
- வேடன்
- வேளாளர்
- வெள்ளையர்
- கொங்கு
வல்லினம் மிகும் இடங்களில் தவறான கூற்று எது
- பாடக் கேட்டேன்
- பேச செய்தார்
- தேடித் திரிந்தான்
- தழுவிக் கொண்டான்
தூயவர் செயல்களாக திரிகடுகம் கூறுவனவற்றுள் தவறானது எது?
- நீராடிய பின் உண்ணுதல்
- பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல்
- சான்றாண்மை குன்றாமை
- எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மை
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வரும் குறள் எத்தனையாவது குறள்?
- 350
- 530
- 754
- 574
'நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்' என்று பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- சச்சிதானந்தன்
வள்ளைக் கொடிகள் மிகுந்த நாடு என நளவெண்பாவில் குறிப்பிடப்படும் நாடு
- அவந்தி நாடு
- அங்க நாடு
- குரு நாடு
- கலிங்க நாடு
இக்கால ஒளவையாரால் இயற்றப்பட்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் எத்தனை பாடல்களை கொண்டது
- 407
- 409
- 507
- 509
நெய்தல் திணையின் கூற்றில் எது தவறானது
- நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
- மக்கள் - பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
- தொழில் - உப்பு விளைத்தல், சூறையாடி பெறப்படுகின்ற பொருள்
- பூ – தாழம்பூ
"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” - என்று கூறும் நூல் எது
- ஆத்திச்சூடி
- மூதுரை
- முதுமொழி
- நால்வழி நாற்பது
வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?
- எத்திராசலு
- துரைராசு
- பெருவாயின் முள்ளியார்
- அந்தககவி வீரராகவர்
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பாடியவர் யார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- சச்சிதானந்தன்
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
- அதிர்ஷ்டம் - நற்பேறு
- பூஜை – ஆராதனை
- குமாஸ்தா – எழுத்தர்
- தைரியம் – துணிவு
வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன
- கண்ணதாசன்
- நாமக்கல் கவிஞர்
- சுரதா
- பிச்சமூர்த்தி
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்
- அப்பூதியடிகளார்
- மாறநாயனார்
- திருநீலகண்டர்
- திருஞானசம்பந்தர்
பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் ______ ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்
- 1890
- 1894
- 1897
- 1898
எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர் யார்?
- பெரியார்
- கண்ணதாசன்
- அண்ணா
- வாலி
‘ஒத்த தரிவானுயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற குறள் கீழ்க்கண்ட எந்த பொருளை உணர்த்துகிறது
- ஒப்புரவாளனது செல்வம் பயன்படுத் தன்மை
- ஒப்புரவின் சிறப்புக் கூறப்பட்டது
- ஒப்புரவறியார் இழிவு
- ஒப்புரவினாற் கெடுவது கேடன்று என்பது
தவறான இணையைத் தேர்ந்தெடு
- உலகு – இடவாகுபெயர்
- பெறல் – தொழிற்பெயர்
- மற்றையான் - குறிப்பு வினைமுற்று
- ஊருணி – காரணப்பெயர்
'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ‘ என்று கூறியவர் யார்?
- கவிமணி
- பரணர்
- கபிலர்
- மாங்குடி மருதனார்
‘தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- நெடுநல்வாடை
- மணிமேகலை
மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்’ என்பதும் "நான்" என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்கின்றன" என்றவர்
- எர்னஸ்ட் காசிரர்
- எர்னஸ்ட் காசிரர் இந்திரன்
- வால்ட் விட்மன்
- பாப்லோ நெருடா
பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை
- 6
- 8
- 7
- 9
சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது?
- அகவற்பா
- நூற்பா
- சிந்துப்பா
- ஆசிரியப்பா
மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்
- க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ
- க, ங, ச, ஞ, ட, த, ந, ப, ம, வ
- க, ங, ச, ட, த, ந, ப, ம, ய, வ
- க, ங, ச, ட, த, ந, ப, ம, ர, ல
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _____ விழாவாகக் கொண்டாடப்பட்டது.
- புனல் விழா
- இந்திர விழா
- பொங்கல்
- மகர விழா
‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?
- புதுமைப்பித்தன்
- சுஜாதா
- வாணிதாசன்
- வண்ணதாசன்