Tnpsc General Tamil Online Notes - 020

TNPSC General Tamil Online Notes - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 020

Tnpsc General Tamil Online Notes - 020

TNPSC General Tamil Online Notes - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i) வேப்பங்கொட்டை
ii) முருங்கை இலை
iii) புங்கன்
iv) உளுந்து
v) பிரண்டை

  • ii , iii
  • ii, iv
  • ii, iv , v
  • ii ,iv
Ans:- D
2.

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?

  • காசிரங்கா புலி
  • காசிரங்கா சிங்கம்
  • காசிரங்கா குரங்கு
  • காசிரங்கா காண்டாமிருகம்
Ans:- D
3.

பொருத்துக
எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
பஞ்சம் iv) இனமிகல்

  • ii i iv iii
  • iii i ii iv
  • i ii iii iv
  • i iv iii ii
Ans:- C
4.

பொருத்துக.
மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை–கேரளம்
மல மூத்தன் iv) ஜார்கண்ட்

  • i ii iii iv
  • ii i iii iv
  • i iv iii ii
  • iv iii ii i
Ans:- D
5.

மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • கர்நாடகா
Ans:- D
6.

உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்" என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்

  • நீலகேசி வாத சருக்கம்
  • மொக்கல வாத சருக்கம்
  • புத்த வாத சருக்கம்
  • ஒலிச் சருக்கம்
Ans:- C
7.

சரியான இணை எது?
ரோமர் – ஒலியின் திசைவேகம்
பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • அனைத்தும் தவறு
Ans:- D
8.

இலக்கணக்குறிப்புத் தருக .
அரும்பும் மலரும், வெப்பம் குளிர்

  • உம்மைத் தொகை, எண்ணும்மை
  • எண்ணும்மை, உம்மைத் தொகை
  • எண்ணும்மை ,பண்புத்தொகை
  • பண்புத்தொகை, எண்ணும்மை
Ans:- B
9.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்

  • புறநானூறு – 188
  • புறநானூறு – 183
  • அகநானூறு – 188
  • அகநானூறு – 183
Ans:- B
10.

இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது

  • தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
  • 1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்
  • ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்
  • இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்
Ans:- B
11.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து

  • மெலி +த்(ந்) + த் + உ
  • மெலி + த் + த்(ந்) + உ
  • மெலிந்து+உ
  • மெலிந்+த்+உ
Ans:- A
12.

கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

  • எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்
  • ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்
  • நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்
Ans:- C
13.

ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.

  • ஏ, கே, இன், எ
  • ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
  • ஏ, கே, ஈ, இன், ஐ
  • எ , ஈ, இன்
Ans:- B
14.

"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்

  • நிரை நேர்
  • நிரை நிரை
  • நேர் நிரை
  • நேர் நேர்
Ans:- C
15.

திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.

  • 51
  • 38
  • 58
  • 85
Ans:- B
16.

இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
எப்படிப் பெயரிடுவேன் ?
இந்தியா 24 மணி நேரம்
காற்றைத் தவிர ஏதுமில்லை

  • அனைத்தும்
  • 1, 2
  • 1 , 3
  • 2 , 3
Ans:- C
17.

இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?

  • பத்ம பூஷண்
  • பத்ம விபூஷண்
  • பத்மஸ்ரீ
  • துரோணாச்சார்யா விருது
Ans:- B
18.

பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"

  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன்
Ans:- C
19.

“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?

  • ம.லெ.தங்கப்பா
  • ஏ.கே.ராமானுஜம்
  • ஆல்பர்காம்யு
  • பிரம்மராஜன்
Ans:- B
20.

பொருத்துக
அந்நியன் i) ஆல்பர்காம்யு
உருமாற்றம் ii) காப்கா
சொற்கள் iii) ழாக் பிரவர்
குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
உலகக் கவிதைகள் v) எக்சு பெரி

  • I ii iii iv v
  • i iii ii v iv
  • i ii iii v iv
  • i iv v iii ii
Ans:- C
21.

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • அகநானூறு
Ans:- C
22.

"வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத் தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ"
என்று பாடியவர் யார்?

  • பாரதி
  • பாரதிதாசன்
  • தாராபாரதி
  • சுரதா
Ans:- C
23.

கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு .
சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்

  • அனைத்தும் சரி
  • 1, 2 சரி
  • 2 , 3 சரி
  • 1 , 3 சரி
Ans:- A
24.

"தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
என்று பாடியவர் யார்?

  • பாரதி
  • பாரதிதாசன்
  • கடுவெளி சித்தர்
  • வள்ளலார்
Ans:- D
25.

"கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • இல்குலாப்
  • சுரதா
Ans:- C
26.

சரியான இணையை தேர்ந்தெடு
இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா

  • அனைத்தும் சரி
  • 1, 2 சரி
  • 2 , 3 சரி
  • 1 , 3 சரி
Ans:- A
27.

கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?

  • குயில்
  • அன்னம்
  • தென்றல்
  • தேச பக்தன்
Ans:- B
28.

நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

  • பொதுமை வேட்டல்
  • முருகன் அல்லது அழகு
  • இளமை விருந்து
  • பெண்ணின் பெருமை
Ans:- C
29.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?

  • 1647
  • 1467
  • 1746
  • 1476
Ans:- B
30.

"ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்ற!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?

  • கண்ணதாசன்
  • வைரமுத்து
  • வாலி
  • சுரதா
Ans:- C
31.

விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
___இனம் 2. வண்ணம் _____
_____ குணம் 4. வனப்பு ____

  • மூன்று , நூறு , பத்து, எட்டு
  • எட்டு, நூறு, பத்து, மூன்று
  • பத்து, நூறு, எட்டு, மூன்று
  • நூறு , பத்து , எட்டு , மூன்று
Ans:- A
32.

தவறான இணையைத் தேர்ந்தெடு.

  • உருபன் – Morpheme
  • ஒளியன் – Phoneme
  • ஒப்பிலக்கணம் – Comparative Grammer
  • பேரகராதி – Lexicon
Ans:- B
33.

கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • தமிழ்ஒளி
  • நாகலிங்கம்
  • கவிமணி
  • மா.அமரேசன்
Ans:- D
34.

பொருத்துக
உற்பத்திப் பொருள் (1 கிலோ) தண்ணீரின் அளவு (லிட்டர்)
ஆப்பிள் i) 822
சர்க்கரை ii) 1780
அரிசி iii) 2500
காப்பி கொட்டை iv) 18, 900

  • i ii iii iv
  • ii iii i iv
  • iv iii ii i
  • i iii ii iv
Ans:- A
35.

" ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
என்ற வரிகள் யாருடையது?

  • தமிழ்ஒளி
  • நாகலிங்கம்
  • கவிமணி
  • யூமா வாசுகி
Ans:- C
36.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

  • குறிப்பறிதல்
  • ஒழுக்கமுடைமை
  • பண்புடைமை
  • அறிவுடைமை
Ans:- A
37.

"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று "
இக்குறளில் பயின்று வரும் அணி

  • எடுத்துக்காட்டுவமை அணி
  • உவமையணி
  • பிறிது மொழிதல் அணி
  • ஏகதேச உருவக அணி
Ans:- B
38.

கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.
1.ஒடிசா 2. கேரளா 3. கர்நாடகம்
4.ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்

  • அனைத்தும்
  • 1, 2, 3
  • 2, 3, 4
  • 3, 4, 5
Ans:- C
39.

சரியான பொருளை தேர்ந்தெடு
துவனம், துகலம்

  • நுட்பமான ஒலி, ஒலி
  • ஒலி, நுட்பமான ஒலி
  • முழங்குதல், ஒலி
  • முழங்குதல், நுட்பமான ஒலி
Ans:- B
40.

கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

  • வியங்கோள் வினைமுற்று தொடர்
  • வினைத் தொகை
  • அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
  • அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
Ans:- C
41.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

  • தேசியத் திறனாய்வுத் தேர்வு
  • ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  • தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
  • மூன்றும் சரி
Ans:- B
42.

பொருத்தமான விடையைத் தேர்க
சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்

  • i ii iii iv
  • iii iv i ii
  • iv iii ii i
  • iii ii i iv
Ans:- B
43.

வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?

  • உம்
  • மட்டும்
  • தான்
Ans:- B
44.

சரியான இணையை தேர்ந்தெடு .
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • இரண்டும் தவறு
Ans:- B
45.

ஓங்கிய‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

  • சந்தி
  • சாரியை
  • உடம்படுமெய்
  • இறந்தகால இடைநிலை
Ans:- C
46.

பிழையை நீக்கி எழுதுக
" தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "

  • தென்னையிலிருந்து நார் எடுத்தார்
  • தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார்
  • தென்னையிலிருந்து நார் உரித்தார்.
  • தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் .
Ans:- B
47.

கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?

  • ' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் .
  • ‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
  • 'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் .
  • வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்
Ans:- D
48.

ஜப்பானியர்கள் ஐ.என் .ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை , இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?

  • கேரளா , தமிழ்நாடு
  • ஆந்திரா , தமிழ்நாடு
  • கேரளா, குஜராத்
  • குஜராத் , தமிழ்நாடு
Ans:- C
49.

. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?

  • தில்லான்
  • பாரதியார்
  • நேதாஜி
  • முத்துராமலிங்கனார்
Ans:- A
50.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க

  • கா+ க்+க்+அ
  • கா+க் + அ
  • கா+ அ + க்+அ
  • கா+க்+க
Ans:- D
51.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?

  • வைரமுத்து
  • கல்கி
  • வல்லிக்கண்ணன்
  • நா. முத்துக்குமார்
Ans:- C
52.

தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • வைரமுத்து
  • முடியரசன்
Ans:- A
53.

பிரித்து எழுதுக : வீடினதன்றறன்

  • வீடின + தன்று + அறன்
  • வீடின + தன்றறன்
  • வீடினது + அன்று + அறன்
  • வீடினதன்று + அறன்
Ans:- C
54.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

  • அவன்
  • எவன்
  • இவன்
  • உவன்
Ans:- B
55.

மரபு பிழைகளை நீக்குக

  • எருது எக்காளமிடும்
  • எருது கத்தும்
  • எருது பிளிறும்
  • எருது அலறும்
Ans:- A
56.

பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க .

  • தோழிக்கு சம்பிரதாயப்படி மேரேஜ் நடந்தது
  • தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  • தோழிக்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது
  • தோழிக்கு மரபுப்படி மேரேஜ் நடந்தது
Ans:- B
57.

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:

  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டு செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டு செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
Ans:- C
58.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி எறி

  • மீ மாசு
  • ஈ காசு
  • தீ வீசு
  • வீ ஏசு
Ans:- C
59.

மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க

  • மிக
  • மிகல்
  • மிகு
  • மிகுதி
Ans:- C
60.

வெள’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

  • பல்லு
  • கைப்பற்றுதல்
  • மீட்டல்
  • பள்ளு
Ans:- B
61.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

  • கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
  • கற்கண்டு, கஞ்சி, கக்குவான், கக்குதல்
  • கஞ்சி, கற்கண்டு, கக்குதல், கக்குவான்
  • கக்குதல், கற்கண்டு, கக்குவான், கஞ்சி
Ans:- A
62.

கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

  • செய்தி வாக்கியம்
  • தனி வாக்கியம்
  • கலவை வாக்கியம்
  • தொடர் வாக்கியம்
Ans:- B
63.

செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக

  • அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளை விண்ணில் ஏவினர்
  • அறிஞர்கள் அறிவியல் செயற்கைகோளை ஏவினர் விண்ணில்
  • செயற்கைகோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது
  • விண்ணில் அறிவியல் அறிஞர்கள் ஏவினர் செயற்கைகோளை
Ans:- A
64.

'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க

  • பயன்பெறுதல்
  • மகிழ்ந்திருத்தல்
  • பயனற்றுப்போதல்
  • வெறுத்திருத்தல்
Ans:- C
65.

‘மயங்கி மதுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?

  • பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  • கம்பர்
  • குமரகுருபரர்
  • ஒட்டக்கூத்தர்
Ans:- D
66.

மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

  • தமிழிலக்கிய வரலாறு
  • தமிழின்பம்
  • கள்ளர் சரித்திரம்
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு
Ans:- D
67.

திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் காலம்

  • 1823 – 1882
  • 1832 – 1874
  • 1823 – 1874
  • 1824 – 1873
Ans:- C
68.

ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் தவறானது எது?
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை
அரசு ஆவணக் காப்பகம் – சென்னை
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி
சரஸ்வதி மகால் – தஞ்சாவூர்

  • அனைத்தும் சரி
  • 1, 2, 3 சரி
  • 1, 2, 4 சரி
  • 1 , 3, 4 சரி
Ans:- C
69.

நேரு தம் மகள் இந்திராவுக்கு _____ ஆண்டு முதல் _____ ஆண்டு வரை கடிதங்கள் இயற்றினார்.

  • 1920 - 1960
  • 1922 – 1962
  • 1920 – 1962
  • 1922 – 1964
Ans:- D
70.

நடுவண் அரசு முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு

  • 1964
  • 1996
  • 1997
  • 1995
Ans:- D
71.

"பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி"
என்னும் பாடல் பொதுமை வேட்டல் நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது

  • தெய்வ நிச்சயம்
  • போற்றி
  • வாழ்த்து
  • பொதுமை
Ans:- B
72.

தவறான இணையைத் தேர்ந்தெடு

  • பயக்கும் - பெறுதல்
  • அன்ன - அவை போல்வன
  • அமையும் – உண்டாகும்
  • அகம் – உள்ளம்
Ans:- A
73.

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்”
என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

  • தொல்காப்பியம்
  • பரிபாடல்
  • சிலப்பதிகாரம்
  • தண்டியலங்காரம்
Ans:- D
74.

மோசிகீரனார் பாடிய பாடல்கள் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம்பெறவில்லை?

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு
Ans:- D
75.

கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் ____ மரபில் பிறந்தார்

  • வேடன்
  • வேளாளர்
  • வெள்ளையர்
  • கொங்கு
Ans:- B
76.

வல்லினம் மிகும் இடங்களில் தவறான கூற்று எது

  • பாடக் கேட்டேன்
  • பேச செய்தார்
  • தேடித் திரிந்தான்
  • தழுவிக் கொண்டான்
Ans:- B
77.

தூயவர் செயல்களாக திரிகடுகம் கூறுவனவற்றுள் தவறானது எது?

  • நீராடிய பின் உண்ணுதல்
  • பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல்
  • சான்றாண்மை குன்றாமை
  • எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மை
Ans:- D
78.

அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வரும் குறள் எத்தனையாவது குறள்?

  • 350
  • 530
  • 754
  • 574
Ans:- C
79.

'நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்' என்று பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சச்சிதானந்தன்
Ans:- D
80.

வள்ளைக் கொடிகள் மிகுந்த நாடு என நளவெண்பாவில் குறிப்பிடப்படும் நாடு

  • அவந்தி நாடு
  • அங்க நாடு
  • குரு நாடு
  • கலிங்க நாடு
Ans:- C
81.

இக்கால ஒளவையாரால் இயற்றப்பட்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் எத்தனை பாடல்களை கொண்டது

  • 407
  • 409
  • 507
  • 509
Ans:- B
82.

நெய்தல் திணையின் கூற்றில் எது தவறானது

  • நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் - பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
  • தொழில் - உப்பு விளைத்தல், சூறையாடி பெறப்படுகின்ற பொருள்
  • பூ – தாழம்பூ
Ans:- C
83.

"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” - என்று கூறும் நூல் எது

  • ஆத்திச்சூடி
  • மூதுரை
  • முதுமொழி
  • நால்வழி நாற்பது
Ans:- B
84.

வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

  • எத்திராசலு
  • துரைராசு
  • பெருவாயின் முள்ளியார்
  • அந்தககவி வீரராகவர்
Ans:- C
85.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பாடியவர் யார்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சச்சிதானந்தன்
Ans:- A
86.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு

  • அதிர்ஷ்டம் - நற்பேறு
  • பூஜை – ஆராதனை
  • குமாஸ்தா – எழுத்தர்
  • தைரியம் – துணிவு
Ans:- B
87.

வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன

  • கண்ணதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சுரதா
  • பிச்சமூர்த்தி
Ans:- C
88.

தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்

  • அப்பூதியடிகளார்
  • மாறநாயனார்
  • திருநீலகண்டர்
  • திருஞானசம்பந்தர்
Ans:- A
89.

பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் ______ ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்

  • 1890
  • 1894
  • 1897
  • 1898
Ans:- B
90.

எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர் யார்?

  • பெரியார்
  • கண்ணதாசன்
  • அண்ணா
  • வாலி
Ans:- C
91.

‘ஒத்த தரிவானுயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற குறள் கீழ்க்கண்ட எந்த பொருளை உணர்த்துகிறது

  • ஒப்புரவாளனது செல்வம் பயன்படுத் தன்மை
  • ஒப்புரவின் சிறப்புக் கூறப்பட்டது
  • ஒப்புரவறியார் இழிவு
  • ஒப்புரவினாற் கெடுவது கேடன்று என்பது
Ans:- C
92.

தவறான இணையைத் தேர்ந்தெடு

  • உலகு – இடவாகுபெயர்
  • பெறல் – தொழிற்பெயர்
  • மற்றையான் - குறிப்பு வினைமுற்று
  • ஊருணி – காரணப்பெயர்
Ans:- C
93.

'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ‘ என்று கூறியவர் யார்?

  • கவிமணி
  • பரணர்
  • கபிலர்
  • மாங்குடி மருதனார்
Ans:- B
94.

‘தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
  • நெடுநல்வாடை
  • மணிமேகலை
Ans:- C
95.

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்’ என்பதும் "நான்" என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்கின்றன" என்றவர்

  • எர்னஸ்ட் காசிரர்
  • எர்னஸ்ட் காசிரர் இந்திரன்
  • வால்ட் விட்மன்
  • பாப்லோ நெருடா
Ans:- A
96.

பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை

  • 6
  • 8
  • 7
  • 9
Ans:- C
97.

சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது?

  • அகவற்பா
  • நூற்பா
  • சிந்துப்பா
  • ஆசிரியப்பா
Ans:- B
98.

மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்

  • க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ
  • க, ங, ச, ஞ, ட, த, ந, ப, ம, வ
  • க, ங, ச, ட, த, ந, ப, ம, ய, வ
  • க, ங, ச, ட, த, ந, ப, ம, ர, ல
Ans:- A
99.

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _____ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

  • புனல் விழா
  • இந்திர விழா
  • பொங்கல்
  • மகர விழா
Ans:- B
100.

‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

  • புதுமைப்பித்தன்
  • சுஜாதா
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
Ans:- C

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!