Tnpsc General Tamil Online Notes - 003

TNPSC General Tamil Online Notes - 3 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

Tnpsc General Tamil Online Notes - 003

TNPSC General Tamil Online Notes - 3 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க

  • 92 படலங்கள், 5027 பாடல்கள்
  • 12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
  • 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
  • 10 சருக்கங்கள், 894 பாடல்கள்
Ans:- C
2.

கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
விளைந்து முதிர்ந்த விழுமுத்து - 1. பட்டினப்பாலை
பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு
காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் - 3. மதுரைக்காஞ்சி
கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது - 4. அகநானூறு போல் நாவாய் அசைந்தது.

  • 4 3 2 1
  • 3 4 2 1
  • 1 2 4 3
  • 3 4 1 2
Ans:- B
3.

‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?

  • குலசேகர ஆழ்வார்
  • ஆண்டாள்
  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  • பெரியாழ்வார்
Ans:- C
4.

“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள் அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?

  • வேலு நாச்சியார்
  • அஞ்சலையம்மாள்
  • தில்லையாடி வள்ளியம்மை
  • அம்புஜத்தம்மாள்
Ans:- C
5.

உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

  • பாம்பாட்டிச் சித்தர்
  • குதம்பைச் சித்தர்
  • அழுகுனிச் சித்தர்
  • கடுவெளிச் சித்தர்
Ans:- D
6.

“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • வெ.இராமலிங்கனார்
  • சுரதா
Ans:- C
7.

‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

  • அப்துல் ரகுமான்
  • வாணிதாசன்
  • முடியரசன்
  • துரை. மாணிக்கம்
Ans:- D
8.

மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ; புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்

  • உமறுப்புலவர்
  • அப்துல் ரகுமான்
  • ந. பிச்சமூர்த்தி
  • ஞானக் கூத்தன்
Ans:- B
9.

தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?

  • இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
  • திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
Ans:- A
10.

‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்

  • பரிதிமாற்கலைஞர்
  • மறைமலையடிகள்
  • இரா.பி.சேதுப்பிள்ளை
  • திரு.வி.க.
Ans:- B
11.

“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில் ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?

  • கபிலர்
  • ஒளவையார்
  • கவிமணி
  • பரணர்
Ans:- C
12.

தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?

  • பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
  • பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
  • கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
  • நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
Ans:- B
13.

‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்

  • திருமூலர்
  • கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
  • பாரதியார்
  • பாரதிதாசன்
Ans:- B
14.

“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்

  • காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  • ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
  • ருசிய அறிஞர் தால்கதாய்
Ans:- C
15.

தாயுமேது தந்தையேது தனையர் கற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்

  • மீரா
  • சாலை, இளந்திரையன்
  • பாஸ்கரதாஸ்
  • பாரதிதாசன்
Ans:- C
16.

“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது

  • மணக்கொடை
  • கைம்மை ஒழிப்பு
  • மூடநம்பிக்கை
  • குழந்தைத் திருமணம்
Ans:- D
17.

நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்

  • நாற்சீர்
  • முச்சீர்
  • ஐஞ்சீர்
  • அறுசீர்
Ans:- B
18.

இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்

  • உ, ஒ
  • இ, ஈ
  • அ, ஆ
  • ப, ம
Ans:- A
19.

இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்

  • அகத்தியலிங்கம்
  • குற்றாலலிங்கம்
  • வைத்தியலிங்கம்
  • நாகலிங்கம்
Ans:- A
20.

‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்

  • 1926 – டிசம்பர் - 6
  • 1936 – டிசம்பர் - 6
  • 1946 – டிசம்பா – 6
  • 1956 – டிசம்பர் - 6
Ans:- D
21.

‘கோட்டோவியங்கள்’ என்பது

  • நேர்கோடு வரைவது
  • கோணக்கோடு வரைவது
  • வளைகோடு வரைவது
  • மூன்று கோடும் வரைவது
Ans:- D
22.

தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை

  • பேச்சுக்கலை
  • ஓவியக்கலை
  • சிற்பக்கலை
  • கட்டடக்கலை
Ans:- B
23.

“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்

  • பாரதியார்
  • ஷெல்லி
  • பாரதிதாசன்
  • இரசூல் கம்சதேவ்
Ans:- D
24.

‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்

  • பாடகர்
  • ஓவியர்
  • நாட்டியர்
  • வனைபவர்
Ans:- B
25.

மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்

  • வானொலி
  • பாவரங்கமேடை
  • தொலைக்காட்சி
  • அனைத்தும்
Ans:- D
26.

“இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?

  • முடியரசன்
  • சுரதா
  • வாணிதாசன்
  • கண்ணதாசன்
Ans:- B
27.

“போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை

  • சிற்பக் கலை
  • பேச்சுக்கலை
  • நாடகக்கலை
  • ஓவியக்கலை
Ans:- C
28.

‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்

  • பரிபாடல்
  • புறநானூறு
  • திருவாசகம்
  • தேவாரம்
Ans:- A
29.

முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை

  • அன்னிபெசண்ட் அம்மையார்
  • தில்லையாடி வள்ளியம்மை
  • முத்துலட்சுமி ரெட்டி
  • இராணிமங்கம்மாள்
Ans:- B
30.

‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்

  • பாவாணர்
  • கம்பர்
  • திரு.வி.க
  • உவே.சா
Ans:- B
31.

‘அந்தமான்’ – எவ்வகை மொழி

  • தனிமொழி
  • தொடர்மொழி
  • பொது மொழி
  • ஓரெழுத்து ஒருமொழி
Ans:- C
32.

தொகைச் சொல்லை விரித்தெழுதுக நானிலம்

  • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
  • குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை
  • குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை
  • முல்லை, மருதம், நெய்தல், பாலை
Ans:- A
33.

பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க

  • பாதமலர்
  • அடிமலர்
  • தேன் தமிழ்
  • மொழியமுது
Ans:- C
34.

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.

  • நாற்பத்திரண்டு
  • ஐம்பத்திரண்டு
  • அறுபத்திரண்டு
  • எழுபத்திரண்டு
Ans:- A
35.

பொருத்துக :
பெயர்ச்சொல் 1. வந்தான்
வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
இடைச்சொல் 3. மாவீரன்
உரிச்சொல் 4. வேலன்

  • 1 4 3 2
  • 4 1 2 3
  • 3 4 1 2
  • 4 1 3 2
Ans:- B
36.

ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது? “ஐனெயைn ளுரஉஉநளளழைn யுஉவ”

  • இந்தியச் சான்றுச் சட்டம்
  • இந்திய உரிமைச் சட்டம்
  • இந்திய வாரிசுரிமைச ;சட்டம்
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
Ans:- C
37.

உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்

  • கால்டுவெல் - கெல்லட்
  • கமில் சுவலபில் - மாக்சுமுல்லர்
  • ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்
  • ஹிப்பாலஸ் - பிளைநி
Ans:- C
38.

கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.

  • பொருட்பெயர்
  • சினைப்பெயர்
  • பண்புப்பெயர்
  • வினைப்பெயர்
Ans:- B
39.

நான், யான் என்பன

  • தன்மை ஒருமைப் பெயர்கள்
  • தன்மைப் பன்மைப் பெயர்கள்
  • படர்க்கைப் பெயர்கள்
  • முன்னிலைப் பெயர்கள்
Ans:- A
40.

“உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –

  • திருக்குறள்
  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு
  • திருவாசகம்
Ans:- D
41.

மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

  • 1911
  • 1934
  • 1903
  • 1905
Ans:- C
42.

தமிழ க அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

  • கவிஞர் முத்துலிங்கம்
  • கவியரசர் கண்ணதாசன்
  • கவிஞா வெ.இராமலிங்கனார்
  • கவிஞர் பாரதிதாசன்
Ans:- C
43.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?

  • 1956
  • 1986
  • 1990
  • 1927
Ans:- C
44.

“வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்

  • காந்தியடிகள்
  • ஜவஹர்லால் நேரு
  • வல்லபாய் பட்டேல்
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Ans:- D
45.

எட்டுத்தொகை நூல்களுள் இல்லாத ஒன்று

  • அகநானூறு
  • புறநானூறு
  • திருக்குறள்
  • பதிற்றுப்பத்து
Ans:- C
46.

நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?

  • உணவு
  • உடல் நலம்
  • நூல்கள்
  • உடற்பயிற்சி
Ans:- C
47.

பட்டினம், பாக்கம் என்றழைப்பது

  • மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
  • வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
  • காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
  • கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
Ans:- D
48.

தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1949இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்
  • 1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்
  • 1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
  • 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்
Ans:- C
49.

யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?

  • பாரி
  • பேகன்
  • அதியமான்
  • ஓரி
Ans:- C
50.

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

  • சிலப்பதிகாரம்
  • அகநானூறு
  • குறுந்தொகை
  • புறநானூறு
Ans:- C
51.

பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?

  • மகள்
  • நாக்கு
  • பல்லின் முதற்பகுதி
  • தாய்
Ans:- D
52.

திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?

  • தேவாரம்
  • வந்தே மாதரம்
  • கீதாஞ்சலி
  • சத்ய சோதனை
Ans:- B
53.

கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.

  • அதிய வலிமையுடைய படை
  • போர் புரியும் திறன்
  • போர் நெறியை கடைபிடித்தல்
  • போர் நெறி மீறுதல்
Ans:- D
54.

“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?

  • குறுந்தொகை
  • பரிபாடல்
  • நற்றிணை
  • அகநானூறு
Ans:- A
55.

“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்

  • ஐங்குறுநூறு
  • அகநானூறு
  • கலித்தொகை
  • ஐந்திணை ஐம்பது
Ans:- A
56.

கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?

  • 39
  • 29
  • 59
  • 49
Ans:- B
57.

ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை

  • 3, 4, 1, 5,2
  • 1, 2, 3, 4, 5
  • 2, 3, 4, 5, 1
  • இல்லை
Ans:- A
58.

திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்

  • பழமொழி நானூறு
  • நால்வர் நான்மணிமாலை
  • திருவள்ளுவ மாலை
  • நாலடியார்
Ans:- C
59.

“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?

  • கலுழவேகன்
  • வீணாபதி
  • சீதத்தன்
  • சீவகன்
Ans:- C
60.

மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு

  • 1908
  • 1857
  • 1869
  • 1911
Ans:- A
61.

கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்

  • சம்பந்தர்
  • அப்பர்
  • சுந்தரர்
  • மாணிக்கவாசகர்
Ans:- A
62.

‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்

  • சுந்தர சுவாமிகள்
  • பெ.சுந்தரம் பிள்ளை
  • குமரகுருபரர்
  • ஒட்டக்கூத்தர்
Ans:- B
63.

போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்

  • குடிலன்
  • பலதேவன்
  • சேரமன்னன்
  • ஜீவகன்
Ans:- D
64.

பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
a) கலீல் கிப்ரான்
b) தாகூர்
c) வால்ட்விட்மன்
d) டால்சுதாய்

  • a,b,c
  • b,c,d
  • c,d
  • a,c
Ans:- D
65.

சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை

  • 349
  • 239
  • 139
  • 129
Ans:- B
66.

முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?

  • செயங்கொண்டார்
  • உமறுப்புலவர்
  • ஒட்டக்கூத்தர்
  • சேக்கிழார்
Ans:- A
67.

மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?

  • மானிடர் பாட்டு
  • புதுமை புரட்சி
  • நவகவிதை
  • புரட்சி பாடல்
Ans:- C
68.

“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.

  • 1966
  • 1961
  • 1972
  • 1971
Ans:- A
69.

கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்

  • I, II
  • II, III
  • I, III
  • அனைத்தும்
Ans:- D
70.

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்

  • பாலசுப்பிரமணியம்
  • அப்துல் ரகுமான்
  • காமராசன்
  • முடியரசன்
Ans:- A
71.

கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்

  • காமராசன்
  • தருமு சிவராமு
  • பசுவய்யா
  • பித்தன்
Ans:- A
72.

காமராசன் இயற்றிய நூல்கள் எது?
1. ஒரு கைதியின் டைரி
2. கிறுக்கல்கள்
3. சூரியகாந்தி
4. பித்தன்

  • 1,2
  • 2,3
  • 1,2,3
  • 2,3,4
Ans:- C
73.

நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்

  • காமராசன்
  • பசுவய்யா
  • மீரா
  • கருணாநிதி
Ans:- D
74.

வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?

  • பவணந்தி முனிவர்
  • வீரமாமுனிவர்
  • வச்சநந்தி முனிவர்
  • புத்தமித்ரர்
Ans:- D
75.

முடியரசன் பிறந்த ஊர்

  • பெரிய குளம்
  • குவளை
  • சின்னமனுர்
  • பள்ளியகரம்
Ans:- A
76.

“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்

  • கம்பர்
  • ஒட்டக்கூத்தர்
  • புகழேந்தி
  • ஒளவையார்
Ans:- D
77.

“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்

  • உணவு
  • மணம்
  • சுவை
  • இலக்கியம்
Ans:- C
78.

பொருட்சுவை மொத்தம் எத்தனை?

  • 8
  • 9
  • 6
  • 2
Ans:- B
79.

தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?

  • வீரம்
  • உவகை
  • பெருமை
  • அவலம்
Ans:- A
80.

கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது

  • மகிழ்ச்சி
  • பெருமிதம்
  • வீரம்
  • புகழ்
Ans:- B
81.

பறம்பு மலையின் அரசன்

  • அதியமான்
  • நள்ளியக்கோடான்
  • பாரி
  • காரி
Ans:- C
82.

வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்

  • பெருஞ்சேரலாதன்
  • சேரன் செங்குட்டுவன்
  • மாந்தரஞ் சேரல் இரும்பொறை
  • புருடோத்தமன்
Ans:- A
83.

பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?

  • செருக்கு
  • வீரம்
  • பேராண்மை
  • சிற்றம்
Ans:- C
84.

சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்

  • கருணாகரத் தொண்டைமான
  • குடிலன்
  • வில்லவன் கோதை
  • விஜயன்
Ans:- C
85.

‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்

  • அனுமன்
  • இராமன்
  • குகன்
  • இலக்குவன்
Ans:- A
86.

சரியான பொருளைக் கூறுக. அளகு அளை

  • பறவையின் மூக்கு கடல் அலை
  • அளவுகோல் புற்று
  • பெண்மயில் புற்று
  • புற்று பெண்மயில்
Ans:- C
87.

இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?

  • இலியட்
  • ஒடிசி
  • ஈனிட்
  • பாலிடிக்ஸ்
Ans:- C
88.

“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்

  • பெரியார்
  • அண்ணா
  • மு.வ
  • கண்ணதாசன்
Ans:- D
89.

திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?

  • திருவாரூர்
  • திருவழுவூர்
  • திருவாமூர்
  • திருவேரகம்
Ans:- C
90.

சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?

  • பெரியார்
  • அம்பேத்கர்
  • திருநாவுக்கரசர்
  • அயோத்திதாசப் பண்டிதர்
Ans:- C
91.

சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்

  • சம்மந்தர்
  • திருமூலர்
  • அப்பரடிகள்
  • இராமானுஜர்
Ans:- C
92.

திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?

  • நேரிசை வெண்பா
  • இணைக்குறள் ஆசிரியப்பா
  • கொச்சகக் கலிப்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
Ans:- C
93.

‘பாழி’ என்ற சொல்லின் பொருள்

  • மொழி
  • வலிமை
  • சிறப்பற்ற
  • புகழ்மிக்க
Ans:- B
94.

இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’

  • வினையெச்சம்
  • பெயரெச்சம்
  • வேர்ச்சொல்
  • வியங்கோள் வினைமுற்று
Ans:- A
95.

இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’

  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்ற
  • ஏவல் வினைமுற்று
  • வினைத்தொகை
Ans:- C
96.

கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?

  • திருவாசகம்
  • திருவிளையாடற்புராணம்
  • இயேசு காவியம்
  • இரட்சண்ய மனோகரம்
Ans:- D
97.

இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி

  • உவமைத்தொகை
  • உருவகம்
  • வினைத்தொகை
  • தொழிற்பெயர்
Ans:- B
98.

இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை

  • பண்புத்தொகை
  • தொழிற்பெயர்
  • வினைத்தொகை
  • உம்மைத்தொகை
Ans:- A
99.

மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்

  • சேக்கிழார்
  • அப்பர்
  • சுந்தரர்
  • மாணிக்கவாசகர்
Ans:- B
100.

வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?

  • திருக்குறள்
  • திருப்பாவை
  • திருமந்திரம்
  • திருவாசகம்
Ans:- B

إرسال تعليق

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!