இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லை
தொகுப்பித்தவர் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி"
இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது
திணை-அகத்திணை, பாவகை - ஆசிரியப்பாவகை.
இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரையுள்ளது.
175 புலவர்களால் பாடப்பட்டது.
நல் + திணை =நற்றிணை என்று பெயர் பெற்றது.
நற்றிணை என்பதற்கு "நல்ல ஒழுக்கலாறு" என்று பொருள்.
இந்நூலின் வேறு பெயர்கள்
- நற்றிணை நானூறு
- தூதின் வழிகாட்டி
"நல்" என்னும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை.
திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
பின்னந்தூர் நாராயணசாமி, நற்றிணைக்கு முதலில் உரை எழுதி புதிப்பித்தார்.
நற்றிணைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். குறிப்பிடும் கடவுள் திருமால்
நற்றிணையை பாடியோர்
- வண்ணப்புற சுந்தரனார்
- மலையனார்
- தும்பிசேர், கீரனார்
- தனிமகளார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
இந்நூலில் 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை.
பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற வழி காட்டியாக குருகு, கிளி, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பையும் நற்றிணையில் காணலாம்.