Tnpsc General Tamil Online Notes - 010

TNPSC General Tamil Online Notes - 10 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 010

Tnpsc General Tamil Online Notes - 010

TNPSC General Tamil Online Notes - 10 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

உவமை கவிஞர் இயற்றிய நூல் எது

  • சூரியகாந்தி
  • நிலவுப்பூ
  • தேன்மழை
  • பூங்கொடி
Ans:- C
2.

அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

  • சம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
  • அருணகிரிநாதர்
  • சுந்தரர்
Ans:- B
3.

மனித நாகரிகத் தொட்டில்

  • ஆப்பிரிக்கா
  • கன்னியாகுமரி
  • லெமூரியா
  • எகிப்து
Ans:- C
4.

தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?

  • திருவாசகம்
  • தேவாரம்
  • திருக்குறள்
  • நாலடியார்
Ans:- C
5.

அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?

  • அறிஞர் அண்ணா
  • பெரியார்
  • மூ.வ
  • நேருஜி
Ans:- B
6.

"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?

  • வ.செ.குழந்தைசாமி
  • கா.விஜயரத்தினம்
  • இரா.மீனாட்சி
  • அப்துல்கலாம்
Ans:- D
7.

யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?

  • சிற்பி
  • தருமு சிவராமு
  • மணி
  • பசுவய்யா
Ans:- C
8.

தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • அண்ணா
  • பெருஞ்சித்திரனார்
Ans:- A
9.

"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • தாராபாரதி
  • ஆனந்தரங்கர்
  • அம்புஜத்தம்மாள்
  • உடுமலை நாராயண கவி
Ans:- B
10.

திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  • 130
  • 110
  • 30
  • 131
Ans:- C
11.

திருக்குறள் என்பது

  • சொல் ஆகுபெயர்
  • பொருளாகு பெயர்
  • கருவியாக பெயர்
  • அடையடுத்த கருவியாகு பெயர்
Ans:- D
12.

ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு

  • 1980
  • 1972
  • 1978
  • 1979
Ans:- C
13.

குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?

  • தாழ்வாரம்
  • தாழ்பால்
  • பூட்டு
  • கதவு
Ans:- A
14.

"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • தொல்காப்பியம்
  • நன்னூல்
Ans:- C
15.

"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?

  • நெடுமங்காடு
  • ஜார்கண்ட்
  • பாலக்காடு
  • மேற்கு தொடர்ச்சி மலை
Ans:- C
16.

தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது

  • தமிழர் நேசன்
  • தமிழ்ச்சிட்டு
  • தென்றல்
  • முல்லை
Ans:- A
17.

"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?

  • அவ்வையார்
  • காக்கைபாடினியார்
  • திருவள்ளுவர்
  • தொல்காப்பியர்
Ans:- A
18.

காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

  • இராமலிங்கனார்
  • இராமலிங்க அடிகள்
  • ராமசாமி
  • ராமமூர்த்தி
Ans:- A
19.

"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
Ans:- C
20.

"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?

  • மோசிகீரனார்
  • திருவள்ளுவர்
  • பாரதியார்
  • அவ்வையார்
Ans:- B
21.

"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி
எடுத்துரைத்த நூல் எது?

  • தேவாரம்
  • திருமந்திரம்
  • திருவாசகம்
  • திருக்குறள்
Ans:- C
22.

"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?

  • மகாத்மா காந்தி
  • ஜவஹர்லால் நேரு
  • அம்பேத்கர்
  • பெரியார்
Ans:- A
23.

மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?

  • பாண்டித்துரை
  • ராகவனார்
  • உவேசா
  • பாஸ்கரசேதுபதி
Ans:- D
24.

இறைவனை நடனமாட செய்தவர் யார்?

  • பிடாரி
  • துர்க்கை
  • பத்ரகாளி
  • பார்வதி
Ans:- C
25.

சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?

  • வள்ளலார்
  • குமரகுருபரர்
  • கடுவெளிச் சித்தர்
  • இராமலிங்க அடிகள்
Ans:- A
26.

குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

  • கிட்கிந்தா காண்டம்
  • அயோத்திய காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்த காண்டம்
Ans:- B
27.

பஜகோவிந்தத்தை இயற்றியவர்

  • சங்கரர்
  • பெரியாழ்வார்
  • நம்மாழ்வார்
  • குமரிலப்பட்டர்
Ans:- A
28.

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி

  • பேதை
  • பெதும்பை
  • மடந்தை
  • அரிவை
Ans:- B
29.

"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • நம்மாழ்வார்
  • பூதத்தாழ்வார்
  • பேயாழ்வார்
  • பெரிய ஆழ்வார்
Ans:- D
30.

சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது

  • முக்கூடற்பள்ளு
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • நந்திக்கலம்பகம்
  • கலிங்கத்துப்பரணி
Ans:- A
31.

வீரமாமுனிவர் மறைந்த இடம்

  • இத்தாலி
  • ரியூனியன் தீவு
  • பாலக்காடு
  • அம்பலக்காடு
Ans:- D
32.

பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்

  • 103
  • 104
  • 105
  • 101
Ans:- C
33.

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

  • 3600
  • 3630
  • 3512
  • 3615
Ans:- D
34.

"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?

  • ஆண்டாள்
  • குலசேகரர்
  • பூதத்தாழ்வார்
  • பெரிய ஆழ்வார்
Ans:- B
35.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?

  • உமாமகேசுவரனார்
  • நமச்சிவாய முதலியார்
  • வரதநஞ்சையப் பிள்ளை
  • பெருஞ்சித்திரனார்
Ans:- C
36.

சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு

  • 1991
  • 1992
  • 1993
  • 1997
Ans:- A
37.

தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

  • இராமலிங்க அடிகள்
  • இராமலிங்கனார்
  • நமச்சிவாய முதலியார்
  • ஞானியார் அடிகள்
Ans:- B
38.

"கழல்" என்பதன் பொருள்

  • தாமரை மலர்
  • மகள்
  • திருவடி
  • கணையாழி
Ans:- C
39.

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

  • ஐந்து
  • ஆறு
  • ஏழு
  • எட்டு
Ans:- B
40.

"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக

  • அடிமைகள்
  • தேவர்கள்
  • பகைவர்கள்
  • நண்பர்கள்
Ans:- A
41.

பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?

  • களத்தூர்
  • பெரியகுளம்
  • வேதாரண்யம்
  • தென்காசி
Ans:- C
42.

இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • வரதநஞ்சய பிள்ளை
  • வீரமாமுனிவர்
  • தாயுமானவர்
  • பள்ளியகரம் கந்தசாமிப் புலவர்
Ans:- D
43.

விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?

  • மணிமேகலை
  • வளையாபதி
  • சீவகசிந்தாமணி
  • சிலப்பதிகாரம்
Ans:- C
44.

அகவற்பாவால் அமைந்த நூல் எது?

  • அகநானூறு
  • கலித்தொகை
  • குறுந்தொகை
  • மேற்கண்ட எதுவும் இல்லை
Ans:- A
45.

பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்

  • அதியமான்
  • பேகன்
  • பாரி
  • ஓரி
Ans:- C
46.

சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?

  • கண்ணகி
  • மாதவி
  • வந்தி
  • மணிமேகலை
Ans:- B
47.

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

  • ஒன்பது
  • ஆறு
  • ஐந்து
  • பன்னிரண்டு
Ans:- A
48.

"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?

  • பாஞ்சாலி
  • மாதவி
  • கோப்பெருந்தேவி
  • கண்ணகி
Ans:- D
49.

"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது

  • உவமைத் தொகை
  • உம்மைத் தொகை
  • வேற்றுமைத் தொகை
  • அன்மொழித் தொகை
Ans:- A
50.

பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?

  • அதியமான்
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • சேரன் செங்குட்டுவன்
  • குலோத்துங்கன்
Ans:- C
51.

"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?

  • அறவண அடிகள்
  • சித்திராபதி
  • அரசமாதேவி
  • மணிமேகலை
Ans:- A
52.

மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை

  • 3
  • 4
  • 6
  • 10
Ans:- D
53.

தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை

  • மூன்று
  • நான்கு
  • இரண்டு
  • ஏழு
Ans:- B
54.

"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?

  • திருத்தக்கத்தேவர்
  • ஞானக்கூத்தன்
  • ஈரோடு தமிழன்பன்
  • இந்திரன்
Ans:- A
55.

"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?

  • மீனாட்சி சுந்தரனார்
  • மீனாட்சி
  • சி.சு செல்லப்பா
  • ஜெயகாந்தன்
Ans:- C
56.

சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

  • கணிப்பொறியின் கதை
  • அன்று வேறு கிழமை
  • சிலிக்கன் சில்லு புரட்சி
  • அடுத்த நூற்றாண்டு
Ans:- B
57.

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?

  • வரும் போகும்
  • முப்பட்டை நகரம்
  • தமிழ் அழகியல்
  • தோனி வருது
Ans:- D
58.

அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு

  • 1937
  • 1947
  • 1957
  • 1952
Ans:- A
59.

மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?

  • சுப்பிரதீபக் கவிராயர்
  • நவநீதகிருஷ்ண பாரதியார்
  • கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள்
  • கதிரை வேலன்
Ans:- C
60.

அகநானூற்றை தொகுத்தவர் யார்?

  • உருத்திரசன்மர்
  • உக்கிரப் பெருவழுதி
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • இளங்கோ அடிகள்
Ans:- A
61.

"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?

  • பெருங்குன்றூர் கிழார்
  • இளங்கீரனார்
  • இளங்கோவடிகள்
  • நக்கீரனார்
Ans:- D
62.

பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?

  • ஆறு
  • ஐந்து
  • நான்கு
  • எட்டு
Ans:- B
63.

இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?

  • பெருநாரை
  • பெருங்குருகு
  • தேவாரம்
  • பெரிய புராண கீர்த்தனை
Ans:- C
64.

மொழியின் அடிப்படை எது?

  • ஒளி
  • எழுத்து
  • சொல்
  • ஒலி
Ans:- D
65.

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • கம்பர்
  • திருமூலர்
Ans:- A
66.

கந்தபுராணக் கீர்த்தனை என்பது

  • இசைநூல்
  • நாடக நூல்
  • இயல் நூல்
  • நாட்டிய நூல்
Ans:- A
67.

கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?

  • கீட்ஸ்
  • வோர்ட்ஸ்வொர்த்
  • ஜான்சன்
  • கீன்ஸ்
Ans:- A
68.

"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்

  • மான்
  • ஆடு
  • காட்டெருமை
  • மனிதன்
Ans:- C
69.

"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?

  • சோழர்கள்
  • சேரர்கள்
  • பாண்டியர்கள்
  • பல்லவர்கள்
Ans:- D
70.

பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?

  • துரைராஜன்
  • வ.ரா
  • ஞானியார் அடிகள்
  • உமாபதி சிவாச்சாரியார்
Ans:- B
71.

"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?

  • சி ஆர் ரெட்டி
  • பாரதியார்
  • கால்டுவெல்
  • ஈராஸ் பாதிரியார்
Ans:- A
72.

வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?

  • வஞ்சிப்பா
  • கலிப்பா
  • அகவற்பா
  • வெண்பா
Ans:- B
73.

"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?

  • முதுமொழிக்காஞ்சி
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • திருக்குறள்
Ans:- A
74.

இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?

  • மோசிகீரனார்
  • இளங்கோ அடிகள்
  • கோவூர்கிழார்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- C
75.

"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?

  • வரதராசனார்
  • பெருஞ்சித்திரனார்
  • பாரதியார்
  • பாரதிதாசனார்
Ans:- B
76.

திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன

  • 88
  • 82
  • 100
  • 101
Ans:- C
77.

"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?

  • லால் பகதூர் சாஸ்திரி
  • இந்திரா காந்தி
  • ஜவஹர்லால் நேரு
  • காமராஜர்
Ans:- B
78.

சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

  • 1972
  • 1973
  • 1974
  • 1982
Ans:- A
79.

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

  • ஓவியக் கலை
  • ஆடற் கலை
  • சிற்பக்கலை
  • எழுத்துக்கலை
Ans:- B
80.

"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?

  • பெல்
  • லிட்டில்வுட்
  • ஜூலியன் ஹக்ஸுலி
  • இந்திரா காந்தி
Ans:- C
81.

சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?

  • திருக்கோஷ்டியூர்
  • திருக்கடையூர்
  • காளையார் கோவில்
  • சிவகங்கை
Ans:- A
82.

"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
Ans:- A
83.

"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?

  • மதுரை
  • திருவஞ்சைக்களம்
  • வட கேரளம்
  • கும்பகோணம்
Ans:- A
84.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

  • பிரம்மன்
  • விஷ்ணு
  • சிவன்
  • ஊர்த்துவ தாண்டவன்
Ans:- C
85.

'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?

  • அதியமான்
  • நள்ளி
  • கில்லி
  • பாரி
Ans:- B
86.

"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?

  • பெருஞ்சித்திரனார்
  • பாரதிதாசனார்
  • பாரதியார்
  • திரு வி கல்யாண சுந்தரனார்
Ans:- D
87.

வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு

  • 1867
  • 1872
  • 1865
  • 1863
Ans:- C
88.

உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தமதானபுரம்
  • சென்னை
  • கும்பகோணம்
  • திருமறைக்காடு
Ans:- B
89.

கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?

  • மஞ்சள் சிட்டு
  • தூக்கணாங்குருவி
  • செங்காகம்
  • பவளக்காலி
Ans:- D
90.

"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?

  • இராமசாமி
  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • தாராபாரதி
Ans:- B
91.

வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?

  • காளிதாசரின் சகுந்தலம்
  • பெர்னாட்ஷாவின் ஆங்கில நாடகம்
  • டால்ஸ்டாய் நூல்கள்
  • மேற்கண்ட எவையுமில்லை
Ans:- B
92.

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?

  • கடுவெளி சித்தர்
  • விளம்பிநாகனார்
  • சமண முனிவர்
  • அகத்தியர்
Ans:- A
93.

"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?

  • பெரியார்
  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • துரைமாணிக்கம்
Ans:- A
94.

நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?

  • ராஜாஜி
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
  • நேதாஜி
  • அம்பேத்கர்
Ans:- B
95.

தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?

  • உண்மை பேசுதல்
  • ஒழுக்கம் உடைமை
  • ஆக்கமுடைமை
  • அன்னதானம் செய்தல்
Ans:- A
96.

ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு

  • 1915
  • 1903
  • 1901
  • 1911
Ans:- D
97.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?

  • அப்பர்
  • திருஞானசம்பந்தர்
  • பெரியாழ்வார்
  • சுந்தரர்
Ans:- B
98.

தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?

  • 30
  • 40
  • 31
  • 41
Ans:- D
99.

திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • காரியாசான்
  • கணிமேதாவியார்
  • பொய்கையார்
  • கூடலூர் கிழார்
Ans:- B
100.

அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?

  • கற்றது மறவாமை
  • நோயின்றி வாழ்தல்
  • நன்மை செய்தல்
  • வாய்மை உடைமை
Ans:- A

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!