Tnpsc General Tamil Online Notes - 021
"TNPSC General Tamil Online Notes - 21 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 021
TNPSC General Tamil Online Notes - 21 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
பொருத்துக.
a) வாணிதாசன் - 1) ஆனந்தத்தேன்
b) சச்சிதானந்தன் - 2) குழந்தை இலக்கியம்
c) பாரதி தாசன் - 3) கனிச்சாறு
d) பெருஞ்சித்திரனார் - 4) விழுதும் வேரும்
- 2 1 4 3
- 1 2 3 4
- 4 1 2 3
- 4 3 2 1
சித்த மருத்துவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
- அயோத்திதாசப்பண்டிதர்
- வள்ளலார்
- பெருஞ்சித்திரனார்
- திரு.வி.க
கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?
- ஏலாதி
- திரிகடுகம்
- நாலடியார்
- மூதுரை
நட்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- தமர்
- உரவோர்
- இடும்பை
- இகல்
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லை கண்டறிக.
- வேங்கை
- உழுவை
- புலி
- மடங்கல்
பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்தெழுதுக.
- சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது.
- திருநெல் வேலி சமஸ்தானம் பெரியது.
- விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்.
- வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்.
எம்மருங்கும் என்னும் சொல்லை பிரித்தெழுதுக
- எ + மருங்கும்
- எம்மை + மருங்கும்
- எம் + மருங்கும்
- எல்லா + மருங்கும்
புது நெறி கண்ட புலவர் என்று வள்ளலாரை போற்றியவர் யார்?
- பாரதி தாசன்
- பாரதியார்
- திரு.வி.க
- பெருஞ்சித்திரனார்
சதகம் என்பது எத்தனை பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்?
- பத்து
- நூறு
- ஆயிரம்
- பத்தாயிரம்
மருத்துப்பை பிரித்து எழுதுக.
- மருந்து + பை
- மருத்து + பை
- மருத்து + உப்பை
- மரு + துப்பை
Whats App என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிக.
- கட்செவி அஞ்சல்
- என்ன செயலி
- பெருஞ்செய்தி
- கட்புலன் அஞ்சல்
வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.
- வலது பக்கம் சுவரில் எழுதாதே
- வலப்பக்கச்சுவரில் எழுதாதே
- வலப்பக்கச்சுவற்றில் எழுதாதே
- வலது பக்கம் சுவரில் எழுதாதே
மரபுப்பிழையை நீக்கி எழுதுக.
- பசு அழைக்கும்
- பசு கதறும்
- பசு கத்தும்
- பசு குழறும்
சந்திப்பிழையை நீக்கி எழுதுக.
- நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்.
- நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
- நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டுப் பலரும் வியந்தனர்.
- நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
ஆரல் - ஆறல் ஒலி வேறுபாடு அறிக.
- மீன் - தணிதல்
- நண்டு - ஆறுதல்
- முத்து - ஆறு
- கொக்கு - குளம்
யா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
- கட்டு
- சுட்டு
- விடை
- துற
செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.
- செத்து
- சா
- சாதல்
- இற
முதனிலை திரிந்த தொழிற்பெயரை கண்டறிக.
- சுடு
- பாடு
- சூடு
- செல்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
- மணம், பொடி, பூசல், புதுமை
- புதுமை, பூசல், பொடி, மணம்
- பூசல், பொடி, மனம், புதுமை
- பொடி, புதுமை, பூசல், மணம்
கொள் என்பதன் வினையெச்சம்.
- கொள்தல்
- கொண்டு
- கொள்கை
- கொண்ட
பொருந்தாதைக்கண்டறிக
- வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ந்து - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ச்சி - தொழிற்பெயர்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- இராமன் வளைத்து வில்லை பெற்றான் புகழ்
- வில்லை வளைத்து இராமன் பெற்றான் புகழ்
- பெற்றான் புகழ் வில்லை வளைத்து இராமன்
- இராமன் வில்லை வளைத்து புகழ் பெற்றான்
வருகை என்பது பெயர்ச்சொல்லின் எவ்வகை?
- இடுகுறிப் பெயர்
- காரணப்பெயர்
- தொழிற்பெயர்
- இடுகுறி பொது பெயர்
மல்லல் குருத்து என்பதன் இலக்கண குறிப்பு தருக.
- குணப்பெயர்
- தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- உரிச்சொற்றாடர்
உறாஅமை இலக்கணக்குறிப்பு தருக.
- சொல்லிசையளபெடை
- செய்யுளிசையளபெடை
- இன்னிசையளபெடை
- நான்காம் வேற்றுமைத்தொகை
அமெரிக்காவில் படிக்காத மக்களில்லை என்ற விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு.
- அமெரிக்காவில் யார் படிப்பர்?
- அமெரிக்காவில் மக்கள் படிப்பார்களா?
- அமெரிக்காவில் படிக்காத மக்கள் உண்டா?
- எங்கு படிக்காத மக்கள் இல்லை?
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" - என்று கூறும் நூல் எது?
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- மூதுரை
- முதுமொழிக்காஞ்சி
" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" - என்று கூறியவர்
- மதுரை இளநாகனார்
- இடைக்குன்றூர்க்கிழார்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- கணியன் பூங்குன்றனார்
அக நானூற்றில் 4, 14, 24,..என்ற ஒழுங்கு முறையில் பாடப்பட்ட திணை எது?
- மருதம்
- நெய்தல்
- முல்லை
- குறிஞ்சி
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி எந்த சமயம் சார்ந்த நூல்?
- சமணம்
- பௌத்தம்
- வைணவம்
- சைவம்

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
- 64
- 72
- 63
- 12
தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
- 3615
- 3363
- 3776
- 4286
இஸ்லாமிய கம்பர் எனப்புகழப்படுபவர் யார்?
- எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- உமறுப்புலவர்
- வீரமாமுனிவர்
- கடிகை முத்துப்புலவர்
கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று பாராட்டியவர் யார்
- ஒட்டக்கூத்தர்
- பலப்பட்டடை சொக்கநாத புலவர்
- கம்பர்
- புகழேந்திப்புலவர்
" அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே" - எனக்கூறும் நூல் எது?
- முத்தொள்ளாயிரம்
- தமிழ் விடு தூது
- தமிழம்மை பிள்ளைத்தமிழ்
- கிள்ளை விடு தூது
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
- 12
- 18
- 14
- 6
உழவர் வாழ்வை சித்தரிக்கும் இலக்கியம் எது?
- குறவஞ்சி
- பள்ளு
- காவடிச்சிந்து
- முத்தொள்ளாயிரம்
திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் யார்?
- அழகிய சொக்க நாதர்
- வேத நாயக சாஸ்திரியார்
- சொக்க நாதப்பிள்ளை
- பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
"ஓடும்; சுழி சுத்தம் உண்டாகும்; துன்னலரைச் சாடும்; பரிவாய்த்தலை சாய்க்கும் " - இயற்றியவர் யார்?
- அழகிய சொக்க நாதர்
- இராமச்சந்திரக்கவிராயர்
- காளமேகப்புலவர்
- என்னாயினப்புலவர்
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
- திருவாமூர்
- திருநாவலூர்
- திருவாதவூர்
- திங்களூர்
அன்பும் சிவனும் இரண்டு என்பார் அறிவிலார்" - என்று கூறியவர்?
- திருமூலர்
- அப்பர்
- சுந்தரர்
- அருணகிரி நாதர்
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
- 9- ஆம் நூற்றாண்டு
- 12- ஆம் நூற்றாண்டு
- 7- ஆம் நூற்றாண்டு
- 8- ஆம் நூற்றாண்டு
இரட்சணிய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
- வீரமா முனிவர்
- உமறுப்புலவர்
- கடிகை முத்துப்புலவர்
"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர்?
- பாரதி தாசன்
- வாணி தாசன்
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த ஊர்?
- தேரழுந்தூர்
- தேரூர்
- கன்னியாக்குமரி
- சிறுகூடற்பட்டி
பாரதி தாசன் பரம்பரைக்கவிஞர் யார்?
- வாணி தாசன்
- முடியரசன்
- கண்ண தாசன்
- சுரதா
இயேசு காவியத்தை எழுதியவர்?
- வாணி தாசன்
- முடியரசன்
- கண்ண தாசன்
- உடுமலை நாராயண கவி
சுரதாவின் இயற்பெயர்?
- அரங்க திருக்காமு
- துரை ராஜ்
- ராஜ கோபால்
- உடுமலை நாராயண கவி
பொதுவுடைமைக்கருத்துகளை திரைப்பட பாடலில் புகுத்தியவர்?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- முடியரசன்
- கண்ண தாசன்
- உடுமலை நாராயண கவி
காட்டு வாத்து என்ற கவிதைத்தொகுப்பினை இயற்றியவர்?
- பிச்ச மூர்த்தி
- சிசு செல்லப்பா
- தருமு சிவராமு
- பசுவய்யா
விடி வெள்ளி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார்?
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
கனவுப்பூக்கள் என்ற காப்பிய நூலை எழுதியவர்?
- ஆலந்தூர் மோகனரங்கன்
- சாலை இளந்திரையன்
- தேவதேவன்
- கலாப்ரியா
" புத்தக வாசிப்பை கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது." என்று கூறியவர் யார்?
- காந்தியடிகள்
- அறிஞர் அண்ணா
- அப்துல் கலாம்
- நேரு
நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கம்பிள்ளை பயன்படுத்திய சொற்றொடர் எது?
- தின எழுத்து
- தகவல் குறிப்பு
- சொஸ்தலிகிதம்
- அலுவல் குறிப்பு
ஆனந்த ரங்கக்கோவை எழுதியவர்?
- அரிமதி தென்னகன்
- தியாகராச தேசிகர்
- சீனிவாசக்கவி
- கஸ்தூரி ரங்கக்கவி
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை" என்று கூறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
- குண நூல்
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
- வீரமாமுனிவர்
- வ.வே.சு.ஐயர்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
நளாயினி என்ற சிறுகதையை எழுதியவர்?
- அறிஞர் அண்ணா
- கலைஞர் மு. கருணாநிதி
- கல்கி
- கு.ப.ரா
கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்?
- மீனாட்சியம்மன் கோயில்
- தஞ்சை பெரிய கோயில்
- தாராசுவரம் கோயில்
- மாமல்லபுரம் கடற்கரை கோயில்
ஓவியக்கலைஞர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?
- ஓவியர் குழாம்
- ஓவியர் குழுமம்
- ஓவிய மாக்கள்
- ஓவிய மக்கள்
மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக விளங்குவது எது?
- உணர்ச்சி
- சொல் நயம்
- கருத்து
- முடிவுரை
இயக்கப்படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்?
- எட்வார்ட் மைபிரிட்டிசு
- கியாட்
- வில்லியம் பிரிஸ்கிரீன்
- பிரான்சிஸ் சென்கின்சு
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி" - என்று கூறியவர்?
- பரிதிமாற்கலைஞர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவ நேயப்பாவாணர்
- கெல்லட்
மக்கள் இலக்கியம் என்றழைக்கப்படுபவை எவை ?
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- திருக்குறள்
- சங்க இலக்கியங்கள்
- தொல்காப்பியம்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனபோற்றப்படுபவர்
- திரு.வி.க
- மு.வரதராசனார்
- பரிதி மாற்கலைஞர்
- மறைமலையடிகள்
உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறியவர்?
- பரிதிமாற்கலைஞர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவ நேயப்பாவாணர்
- கெல்லட்
பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து

சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை" என்று கூறியவர் யார்?
- முத்துராமலிங்க தேவர்
- முத்துராமலிங்க தேவர்
- பெரியார்
- காமராசர்
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்று கரும்பைப்பிழிவதற்கு எந்திரம் இருந்ததை கூறும் நூல் எது?
- திருவாசகம்
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- பெருங்கதை
குடிலின் முன் " கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்" என்று எழுதி வைத்தவர் யார்?
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- அம்புஜத்தம்மாள்
- அஞ்சலையம்மாள்
- அசலாம்பிகை அம்மையார்
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள முந்நீர் வழக்கம் எதைக்குறிக்கிறது?
- கடற்பயணம்
- மீன் பிடித்தல்
- கப்பல் கட்டுதல்
- உப்பு காய்ச்சுதல்
மருத நில கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று கூறும் நூல் எது?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- புறநானூறு
- முல்லைப்பாட்டு
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று கூறும் நூல் எது?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- புறநானூறு
- தொல்காப்பியம்
நீர்க்கோவையை நீக்குவது எது?
- மஞ்சள்
- தேங்காய்
- கீழா நெல்லி
- துளசி
ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்று கூறியவர்?
- தாயுமானவர்
- வள்ளலார்
- திரு.வி.க
- மு.வ
வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியவர்?
- பெரியாழ்வார்
- குலசேகராழ்வார்
- நம்மாழ்வார்
- ஆண்டாள்
நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின. - எவ்வகை வாக்கியம்?
- கலவைத்தொடர்
- உணர்ச்சித்தொடர்
- பிறவினைத்தொடர்
- செயப்பாட்டுவினைத்தொடர்
" பசுத்தோல் போர்த்திய புலிபோல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்வு செய்க.
- வேட்டையாடுதல்
- பசு புலியாதல்
- நயவஞ்சகம்
- வேண்டாவேலை
நாற்சீர் கொண்ட அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதல் எழுத்து ஒத்து வருவது?
- கூழை மோனை
- மேற்கதுவாய் மோனை
- முற்று மோனை
- ஒரூஉ மோனை
"ஆர்கலி உலகத்து மக்களுக்கு எல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்று கூறும் நூல்?
- முதுமொழிக்காஞ்சி
- திரிகடுகம்
- பழமொழி நானூறு
- இனியவை நாற்பது
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்று கூறும் நூல்?
- குறுந்தொகை
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- புறநானூறு
கீழ்க்கண்டவற்றுள் உவம உருபுகள் யாவை?
- புரைய
- ஒப்ப
- உறழ
- இவை அனைத்தும்
திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- 109
- 102
- 105
- 107
குறிஞ்சித்திணையின் பறை எது?
- மணமுழா
- துடி
- தொண்டகம்
- ஏறுகோட்பறை
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை" இத்தொடரில் இறை என்று குறிப்பிடப்படுபவர் யார்?
- இராமன்
- இலக்குவன்
- குகன்
- பரதன்
இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலை எழுதியவர் யார்?
- இராமானுஜம்
- அம்பேத்கர்
- பெரியார்
- இராஜாஜி
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப" என்ற புற நாநூற்று பாடலை இயற்றியவர்?
- மிளைகிழான் நல்வேட்டனார்
- கண்ணகனார்
- சோழன் நல்லுருத்திரன்
- கபிலர்
அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றி" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
- பெரிய புராணம்
- சீறாப்புராணம்
- கம்பராமாயணம்
- நளவெண்பா
அன்பை பெருக்கிஎனது ஆருயிரைக்காக்க வந்த
இன்பப்பெருக்கே இறையே பராபரமே" என்று பாடியவர் யார்?
- மாணிக்க வாசகர்
- தாயுமானவர்
- வள்ளலார்
- திருநாவுக்கரசர்
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" என்ற அடியில் உகிர் என்பதன் பொருள் யாது?
- நகம்
- விரல்
- தலை
- வால்
உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலினை எழுதியவர்?
- டால்ஸ்டாய்
- பெட்ரண்ட் ரஸ்ஸல்
- காளிதாசர்
- காரல் மார்க்ஸ்
காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்?
- அரிச்சந்திரன்
- பக்தப்பிரகலாதன்
- சிரவணபிதுர்பத்தி
- லவகுசா
நாளிகேரம் என்பது எதைக்குறிக்கிறது?
- பனை
- பாக்கு
- மூங்கில்
- தென்னை
உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல உருவாகும்" என்று கூறியவர் யார்?
- அம்பேத்கர்
- காந்தியடிகள்
- பெரியார்
- நேரு
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்?
- வெட்சி
- உழிஞை
- நொச்சி
- காஞ்சி
எந்த பா வகையின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு?
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்பதில் நோன்றல் என்பதன் யாது?
- மறத்தல்
- பொறுத்தல்
- கேளாமை
- மதித்தல்
"பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" இடம் பெற்ற நூல்?
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
- தேவாரம்
- நந்திக்கலம்பகம்
- கலித்தொகை
குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?
- மாலை
- எற்பாடு
- வைகறை
- யாமம்
தமிழர் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தினர்?
- களர்நிலம்
- உவர்நிலம்
- உவர்நிலம்
- கரிசல் மண்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!