17

Tnpsc General Tamil Online Notes - 024

"TNPSC General Tamil Online Notes - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 024

Tnpsc General Tamil Online Notes - 024

TNPSC General Tamil Online Notes - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை யாருடைய பெயரில் வழங்கிவருகிறது?

  • அஞ்சலையம்மாள்
  • முத்துலட்சுமி ரெட்டி
  • மூவலூர் இராமாமிர்தம்
  • அம்புஜத்தம்மாள்
Ans:- C
2.

பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராடியபோது மலாலாவின் வயது?

  • 13
  • 12
  • 14
  • 15
Ans:- B
3.

எந்தக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்புக்கு வகை செய்கிறது?

  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
  • ஈ.வே.ரா - நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம்
  • மணியம்மையார் கல்வி உதவித்திட்டம்
  • முத்துலட்சுமி ரெட்டி கல்வி உதவித்தொகை
Ans:- B
4.

முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலினை இயற்றியவர்?

  • நீலாம்பிகை அம்மையார்
  • முத்துலட்சுமி ரெட்டி
  • சாவித்திரிபாய்பூலே
  • ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்
Ans:- A
5.

வில்வாள் - இலக்கணக்குறிப்பு தருக

  • உவமைத்தொகை
  • உருவகம்
  • உம்மைத்தொகை
  • வேற்றுமைத்தொகை
Ans:- C
6.

கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்காட்டும் நூல்?

  • திருக்குறள்
  • நான்மணிக்கடிகை
  • குடும்பவிளக்கு
  • இருண்டவீடு
Ans:- C
7.

"விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு" என்று கூறும் நூல் எது?

  • ஏலாதி
  • சிறுபஞ்சமூலம்
  • திரிகடுகம்
  • பழமொழி நானூறு
Ans:- B
8.

விதையாமை - இலக்கணக்குறிப்பு தருக

  • எதிர்மறை தொழிற்பெயர்
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வினைமுற்று
  • வினையெச்சம்
Ans:- A
9.

" நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்." என்று கூறியவர்?

  • நேரு
  • பெரியார்
  • அறிஞர் அண்ணா
  • பாரதிதாசன்
Ans:- C
10.

அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்?

  • குடியரசு
  • திராவிடநாடு
  • விடுதலை
  • புரட்சி
Ans:- B
11.

இந்தியமொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?

  • கன்னிமரா நூலகம்
  • திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
  • கொல்கத்தா தேசிய நூலகம்
  • தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
Ans:- D
12.

தேசிய நூலக நாள் எது?

  • ஆகஸ்ட் 9
  • ஆகஸ்ட் 10
  • ஆகஸ்ட் 11
  • ஆகஸ்ட் 12
Ans:- A
13.

மொழிப்பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்வகை எது?

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்
Ans:- C
14.

பழங்காலத்தில் திசை அறிய காந்த ஊசியைப் பயன்படுத்தினர் என்பதை அறிய உதவும் நூல்?

  • பட்டினப்பாலை
  • மணிமேகலை
  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு
Ans:- B
15.

பண்டைத்தமிழரின் கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?

  • மங்களூர்
  • முசிறி
  • முசிறி
  • காவிரிப்பூம்பட்டினம்
Ans:- C
16.

"யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" என்ற அகநானூற்று வரிகள் எந்த துறைமுகத்தைப்பற்றிக் கூறுகிறது?

  • கொற்கை
  • முசிறி
  • தொண்டி
  • காவிரிப்பூம்பட்டினம்
Ans:- B
17.

பெருங்கற்காலத்தைச்சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

  • ஆதிச்சநல்லூர்
  • அரிக்கமேடு
  • கொற்கை
  • கோவை
Ans:- C
18.

நாட்டுப்புற அமைப்பிலிருந்து தோன்றிய பாவகை எது?

  • பள்ளு
  • வெண்பா
  • குறவஞ்சி
  • சிந்து
Ans:- D
19.

" வையை அன்ன வழக்குடை வாயில்" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

  • பட்டினப்பாலை
  • முல்லைப்பாட்டு
  • அகநானூறு
  • மதுரைக்காஞ்சி
Ans:- D
20.

இமிழிசை - இலக்கணக்குறிப்பு தருக.

  • பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை
Ans:- B
21.

நிலைஇய - இலக்கணக்குறிப்பு தருக.

  • இன்னிசை அளபெடை
  • செய்யுளிசை அளபெடை
  • சொல்லிசை அளபெடை
  • இசைநிறை அளபெடை
Ans:- C
22.

காஞ்சி என்பதன் பொருள்?

  • நிலையாமை
  • வளம்
  • இனிமை
  • தலைநகரம்
Ans:- A
23.

இரவில் செயல்படும் கடைவீதி எது?

  • நாளங்காடி
  • பல்லங்காடி
  • அல்லங்காடி
  • நல்லங்காடி
Ans:- C
24.

கிராமச்சந்தையின் நோக்கம் என்ன?

  • கிராமப்பொருளாதார முன்னேற்றம்
  • மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்
  • வேலை வாய்ப்பினை ஏற்படுத்தல்
  • கலப்படமற்ற பொருளை வழங்குதல்
Ans:- B
25.

தொல்காப்பியர் வகைப்படுத்திய ஆகுபெயர்கள் எத்தனை?

  • ஏழு
  • எட்டு
  • பதினைந்து
  • இருபது
Ans:- A
26.

'இரண்டு கிலோ கொடு' எவ்வகை ஆகுபெயர்?

  • முகத்தலளவை
  • எடுத்தலளவை
  • எண்ணலளவை
  • நீட்டலளவை
Ans:- B
27.

கீழ்க்கண்டவற்றுள் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
a ) பிறரிடம் செலுத்துதல்
b) பழிக்கு நாணுதல்
c) அனைவரிடமும் இரக்கம், இணக்கம், உண்மையோடு இருத்தல்
d) பணிவுடன் நடத்தல்

  • a), b), d) சரி
  • a), b), c) சரி
  • a), b) சரி
  • a), d) சரி
Ans:- B
28.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார்." இக்குறளில் பயின்று வரும் அணி எது?

  • உருவக அணி
  • வேற்றுமை அணி
  • ஏகதேச உருவக அணி
  • எடுத்துக்காட்டு உவமை அணி
Ans:- C
29.

தமிழர் அழகியலின் வெளிப்பாடு?

  • ஓவியங்கள்
  • சிற்பங்கள்
  • நடனம்
  • மனையியல்
Ans:- B
30.

கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் திறன் பெற்றவர்?

  • சு.வில்வ ரத்தினம்
  • சு.முத்து
  • நா.முத்துக்குமார்
  • யுகபாரதி
Ans:- A
31.

ஐங்குறுநூற்றில் அமைந்த மருதத்தினைப் பாடலைகளைப் பாடியவர்?

  • அம்மூவனார்
  • பேயனார்
  • ஓரம்போகியார்
  • ஓதலாந்தை
Ans:- C
32.

ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?

  • பன்னாடு தந்த மாறன் வழுதி
  • யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • நன்னன்சேய் நன்னன்
  • புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
Ans:- B
33.

கீழ்க்கண்டவற்றுள் யானையைக்குறிக்கும் சொற்கள் எவை?

Tnpsc General Tamil Online Notes - 024-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


a) களபம்
b) மாதங்கம்
c) வாரணம்
d) வேழம்

  • d) மட்டும்
  • a), b), c) சரி
  • a), b) சரி
  • a), b), c), d) சரி
Ans:- D
34.

ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு எது?

  • யானை டாக்டர்
  • அறம்
  • மத்தகம்
  • ஊமைச்செந்நாய்
Ans:- B
35.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதைத் தேர்ந்தெழுதுக.

  • அங்கம்
  • பஞ்சம்
  • பண்டம்
  • அப்பம்
Ans:- D
36.

அருணகிரிநாதரின் திருப்புகழ் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்?

  • திருமுருகன் பள்ளு
  • காவடிச்சிந்து
  • வீரைத்தலபுராணம்
  • சங்கரன்கோவில் திரிபந்தாதி
Ans:- B
37.

வெள்ளிவீதியார் இயற்றிய பாடல் இடம்பெற்ற நூல்?

  • பதிற்றுப்பத்து
  • கலித்தொகை
  • குறுந்தொகை
  • நற்றிணை
Ans:- C
38.

"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்"
- என்று கூறியவர்?

  • கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
  • நெடுஞ்செழியன்
  • கருணாகரத்தொண்டைமான்
  • நக்கீரர்
Ans:- A
39.

நட்சத்திர மாலை என்னும் நூலை எழுதியவர்?

  • பூரணலிங்கனார்
  • ஆறுமுக நாவலர்
  • சி.வை.தாமோதரனார்
  • வீரமாமுனிவர்
Ans:- C
40.

அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?

  • ஐந்து
  • நான்கு
  • மூன்று
  • இரண்டு
Ans:- B
41.

சிவகங்கை அரசுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தவர்?

  • மீரா
  • மேத்தா
  • பிரமிள்
  • ஈரோடு தமிழன்பன்
Ans:- A
42.

தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் எந்தத்தலைப்பில் நடைபெற்றது?

  • அழகு
  • தமிழ்
  • எழில்
  • குறள்
Ans:- C
43.

குண்டலகேசி நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் எது?

  • நாககுமாரக் காவியம்
  • யசோதரக் காவியம்
  • உதயணக்குமாரக்காவியம்
  • நீலகேசி
Ans:- D
44.

"வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று அடிகளை எழுதியவர்?

  • புல்லாங்காடனார்
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  • மாங்குடி மருதனார்
  • பெருங்கெளசிகனார்
Ans:- B
45.

அறிவியல் தமிழின் முன்னோடி என்று போற்றப்படுபவர்?

  • சேக்கிழார்
  • கபிலர்
  • பெ.நா.அப்புசாமி
  • நெ.துரை வையாபுரி
Ans:- C
46.

தவறாக பொருந்தியுள்ள இணையைத்தேர்க.

  • அக்னிச்சிறகுகள் - அப்துல்கலாம்
  • அறிவியல் தமிழ் - வா.செ.குழந்தைசாமி
  • கணினியை விஞ்சும் மனிதமூளை - கா. விசயரத்தினம்
  • பொங்கியெழு கேணி - அழகிய பெரியவன்
Ans:- D
47.

'புலியிடம் ஆடு மாட்டிக் கொண்டது' என்ற விடைக்கேற்ப வினாவைத்தேர்ந்தெடு.

  • ஆடு மாட்டிக் கொண்டதா?
  • எதனிடம் ஆடு மாட்டிக்கொண்டது?
  • ஆடு புலியிடமா மாட்டிக்கொண்டது?
  • எங்கே ஆடு மாட்டிக்கொண்டது?
Ans:- B
48.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் - எவ்வகை வாக்கியம்

  • வினா வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
  • உணர்ச்சி வாக்கியம்
  • செயப்பாட்டு வாக்கியம்
Ans:- A
49.

முருகன் அடங்கினான் - எவ்வகைத்தொடர்?

  • தன்வினைத்தொடர்
  • பிறவினைத்தொடர்
  • கட்டளைத்தொடர்
  • செயப்பாட்டுவினைத்தொடர்
Ans:- A
50.

'சுதந்திரப்பறவை போல' என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருளைத்தேர்க.

  • மகிழ்ச்சி
  • விரைவு
  • விடுதலை
  • தியாகம்
Ans:- A
51.

அடிதோறும் இறுதிச்சீரின் இறுதி ஒன்றிவரத்தொடுப்பது?

  • மோனை
  • எதுகை
  • இயைபு
  • முரண்
Ans:- C
52.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - இதில் அமைந்துள்ள தொடை?

  • இயைபு
  • அந்தாதி
  • பொழிப்பு
  • ஒரூஉ
Ans:- C
53.

கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?

  • அறிஞர் அண்ணா
  • முத்துராமலிங்கர்
  • பெரியார்
  • பாரதிதாசன்
Ans:- C
54.

ஆசியக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் எது?

  • அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • கல்கத்தா தேசிய நூலகம்
  • தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
  • லைப்ரரி ஆப் காங்கிரஸ்
Ans:- A
55.

ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்கொண்டது?

  • 100
  • 150
  • 300
  • 200
Ans:- A
56.

அக்காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது எது?

  • மாட்டுப்பொங்கல்
  • காணும்பொங்கல்
  • போகித்திருநாள்
  • பொங்கல் திருநாள்
Ans:- C
57.

தூயவர் செயல்களாக திரிகடுகம் குறிப்பிடுபவை யாவை?

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


a) நீராடிய பின் உண்ணுதல்
b) பெரும்பயன் கிடைத்தாலும் பொய் சாட்சி சொல்லாதிருத்தல்
c) வறியவர்க்கு பொருளை அளித்தல்
d) எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல்

  • a), b) சரி
  • a), c) சரி
  • அனைத்தும் சரி
  • a) மட்டும் சரி
Ans:- A
58.

திருவாரூர் நான்மணிமாலையில் குறிப்பிடப்படும் நால்வகை மணிகளுள் இல்லாத ஒன்று எது?

  • மரகதம்
  • மாணிக்கம்
  • கோமேதகம்
  • பவளம்
Ans:- C
59.

நான்மாடக்கூடலுக்கு பெயர்க்காரணம் கூறியவர்?

  • இளங்கோவடிகள்
  • சேக்கிழார்
  • சுந்தரர்
  • பரஞ்சோதியார்
Ans:- D
60.

கல்வெட்டில் மதுரை என்னும் பெயர் எவ்வாறு காணப்படுகிறது?

  • மருதை
  • மதிரை
  • ஆலவாய்
  • கூடல்
Ans:- B
61.

பார்வதிநாதன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?

  • கண்ணதாசன்
  • தெ.பொ.அப்புசாமி
  • மீ.இராசேந்திரன்
  • வாலி
Ans:- A
62.

பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கல்லை மேலெறிந்து பிடித்து விளையாடுவது?

  • அம்மானை
  • கழங்கு
  • ஊசல்
  • ஐந்தாம் கல்
Ans:- A
63.

ஆஸ்தி என்ற பிறமொழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

  • தொடக்கம்
  • சாம்பல்
  • சொத்து
  • துன்பம்
Ans:- C
64.

தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய ஆறுகள் கூடும் இடத்திற்கு எத்திசையில் உள்ளது முக்கூடல்?

  • தெற்கு
  • வடக்கு
  • கிழக்கு
  • மேற்கு
Ans:- B
65.
Tnpsc General Tamil Online Notes - 024-1

கோழியூர் எனப்பெயர்கொண்ட சோழர் தலைநகரம் எது?

  • தஞ்சாவூர்
  • உறந்தையூர்
  • திரிசிராபுரம்
  • கரந்தை
Ans:- B
66.

ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?

  • 42
  • 32
  • 52
  • 45
Ans:- A
67.

"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச்செய்வீர்" என்று பாடியவர்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • வாணிதாசன்
  • தமிழ்ஒளி
Ans:- A
68.

திருத்தக்கதேவர் வாழ்ந்த காலம்?

  • பத்தாம் நூற்றாண்டு
  • ஒன்பதாம் நூற்றாண்டு
  • ஏழாம் நூற்றாண்டு
  • பதினோராம் நூற்றாண்டு
Ans:- A
69.

கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • வட்டிகைச்செய்தி
  • புனையா ஓவியம்
  • சுவரோவியம்
  • ஓவிய எழினி
Ans:- B
70.

ஞாயிற்றைச்சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று கூறும் நூல்?

  • அகநானூறு
  • புறநானூறு
  • நெடுநல்வாடை
  • மதுரைக்காஞ்சி
Ans:- B
71.

கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்டவர்கள்?

  • அரிஸ்டாட்டில்
  • தாலமி
  • கோபர்நிகஸ்
  • A) மற்றும் B)
Ans:- D
72.

வில்லி பாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை?

  • 4350
  • 3450
  • 5430
  • 2350
Ans:- A
73.

"தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்." என்று பாடியவர்?

  • முடியரசன்
  • வாணிதாசன்
  • பாரதிதாசன்
  • தாராபாரதி
Ans:- A
74.

அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்தபோது இயற்றிய செய்யுள் நூல் எது?

  • திலகர் புராணம்
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • காந்தி புராணம்
  • இராமலிங்க சுவாமிகள் சரிதம்
Ans:- D
75.

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

  • 1780
  • 1782
  • 1784
  • 1778
Ans:- A
76.

அஞ்சலையம்மாளின் மகளை காந்தியடிகள் எங்கு அழைத்துச்சென்று படிக்க வைத்தார்?

  • சபர்மதி
  • புனே
  • வார்தா
  • டெல்லி
Ans:- C
77.

இயேசு பெருமானின் வளர்ப்புத்தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்ட நூல் எது?

  • இரட்சணிய யாத்திரிகம்
  • இரட்சணிய மனோகரம்
  • தேம்பாவணி
  • இயேசு காவியம்
Ans:- C
78.

நாடகக்கலையைப்பற்றியும், காட்சித்திரைகளைப்பற்றியும், நாடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாகக்கூறும் நூல்?

  • சிலப்பதிகாரம்
  • மதிவாணர் நாடகத்தமிழ் நூல்
  • விளக்கத்தார் கூத்து
  • கூத்து நூல்
Ans:- A
79.

சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு?

  • பதினெட்டாம் நூற்றாண்டு
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • பதினேழாம் நூற்றாண்டு
Ans:- B
80.

சரயு நதி பாயும் மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • உத்திரப்பிரதேசம்
  • மத்தியப்பிரதேசம்
  • மராட்டியம்
Ans:- B
81.

மூவறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?

  • எறும்பு
  • வண்டு
  • நண்டு
  • நத்தை
Ans:- A
82.

மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றவர்?

  • பரிதிமாற்கலைஞர்
  • தேவநேயப்பாவாணர்
  • பெருஞ்சித்திரனார்
  • மறைமலையடிகள்
Ans:- A
83.

சிலப்பதிகாரத்திலுள்ள மொத்த காதைகளின் எண்ணிக்கை?

  • 30
  • 32
  • 28
  • 33
Ans:- A
84.

பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?

  • தஞ்சாவூர்
  • திருச்சி
  • திருவாரூர்
  • புதுவை
Ans:- B
85.

"ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும்" என்று கூறியவர்?

  • பாரதிதாசன்
  • வள்ளலார்
  • பாரதியார்
  • பெரியார்
Ans:- D
86.

"பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்" இவ்வடிகளில் பண்ணவன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

  • இராமன்
  • குகன்
  • இலக்குவன்
  • இராவணன்
Ans:- C
87.

அம்பேத்கர் எங்கு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்?

  • மும்பை
  • இலண்டன்
  • அமெரிக்கா
  • இத்தாலி
Ans:- B
88.

அடுக்குத்தொடர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க.
a) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
b) பிரித்தால் பொருள் தரும்
c) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்
d) இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்

  • b), c), d) சரி, a) தவறு
  • b), c) சரி
  • a), b), c) சரி, d) தவறு
  • அனைத்தும் சரி
Ans:- B
89.

மடக்கொடி என்ற சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு தருக.

  • பண்புத்தொகை
  • அன்மொழித்தொகை
  • உவமைத்தொகை
  • பெயரெச்சம்
Ans:- B
90.

கீழ்க்கண்டவற்றுள் பொதுமொழியாக வருபவை எவை?

  • பலகை
  • தாமரை
  • வைகை
  • இவை அனைத்தும்
Ans:- D
91.

'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' இத்தொடரில் குறிக்கப்படும் துகிர் என்ற சொல்லின் பொருள்?

  • மாணிக்கம்
  • மரகதம்
  • பவளம்
  • கோமேதகம்
Ans:- C
92.

உயர்ந்தோங்கி - இலக்கணக்குறிப்பு தருக.

  • இனமொழி
  • ஒருபொருட்பன்மொழி
  • குறிப்பு வினையெச்சம்
  • இருபெயரொட்டுப்பண்புத்தொகை
Ans:- B
93.

பொம்மைகளைக்கொண்டு தயாரிக்கும் படங்கள்?

  • இயங்குறு படங்கள்
  • கருத்துப்படம்
  • செய்திப்படம்
  • விளக்கப்படம்
Ans:- A
94.

எம்.ஜி.ஆர். இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் எது?

  • அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
  • தமிழ்ப்பல்கலைக்கழகம்
  • சென்னைப் பல்கலைக்கழகம்
  • அண்ணாப் பல்கலைக்கழகம்
Ans:- C
95.

கீழ்க்கண்டவற்றுள் இசை மரபுகளை வெளிப்படுத்தாத நூல் எது?

  • தொல்காப்பியம்
  • சங்கஇலக்கியம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
Ans:- D
96.

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கட்டட இடிபாடுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?

  • கீழடி
  • கொடுமணல்
  • கோவை
  • கீழார்வெளி
Ans:- D
97.

"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று கூறியவர்?

  • திருஞான சம்மந்தர்
  • திருநாவுக்கரசர்
  • குலசேகர ஆழ்வார்
  • மாணிக்க வாசகர்
Ans:- B
98.

அச்சமில்லை அச்சமில்லை எனும் பாரதியின் பாடலுக்கு முன்னோடி?

  • திருத்தாண்டகப்பாடல்
  • திருவாய்மொழி
  • பெரிய திருமொழி
  • திருக்குறள்
Ans:- A
99.

சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

  • 5615
  • 5027
  • 5680
  • 5720
Ans:- B
100.

யாருடைய வழிகாட்டுதலால் காந்தி தமிழ் பயிலத்தொடங்கினார்?

  • ஸ்மட்ஸ்
  • தால்சுதாய்
  • மதன்மோகன்மாளவியா
  • நேரு
Ans:- B
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 018
Tnpsc General Tamil Online Notes - 018 Tnpsc General Tamil Online Notes - 018 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 017
Tnpsc General Tamil Online Notes - 017 Tnpsc General Tamil Online Notes - 017 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 024
Tnpsc General Tamil Online Notes - 024 Tnpsc General Tamil Online Notes - 024 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share