சங்க இலக்கியம் 473 புலவர்களால் 2381 பாடல்களையும் கொண்டுள்ளது.
சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப் பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளி வந்தன எனவே இக்காலம் நீதி நூற்காலம் எனப்படும்.
நற்றினை முதற்கொண்டு இன்னிலை / கைநிலை ஈராக உள்ள பதினெட்டு நூல்கள், பதினென் கீழ்கணக்கு நூல்கள் என்று கூறப்படுகிறது.
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டது இக்காலத்தில் தான்.
சங்க இலக்கிய நூல்கள்
பதினென் மேல் கணக்கு நூல்கள்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினென் மேல் கணக்கு நூல்கள் ஆகும்.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
- திருமுருகாற்றுப்படை
- பொருநாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
பதினென் கீழ் கணக்கு
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஏலாதி
- பழமொழி நானூறு
- ஆசாரக் கோவை
- சிறு பஞ்ச மூலம்
- முதுமொழிக்காஞ்சி
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமொழி நூற்றைம்பது
- கைந்நிலை
- கார் நாற்பது
- களவழி நாற்பது